வாட்ஸ்ஆப் மூலம் தாயின் இறுதிச் சடங்கை பார்த்த மகள்.! 'ரொம்ப பிஸி".!
அவர் கூறியது என்னவென்றால், நான் ரொம்ப பிஸியாக இருப்பதால் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இப்போது பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை விட மனிதர்களின் அன்பு தான் மிக முக்கியம், ஆனால் அகமதாபாத்-ல் வசிக்கும் பெண்ணின் செயல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அகமதாபாத்-ல் வசிக்கும் பெண் ஒருவர் தான் ரொம்ப பிஸியாக இருப்பதால் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை என்று கூறி வாட்ஸ்ஆப் மூலம் தாய்க்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அவர் தனது தாயின் அஸ்தியை கொரியரில் அனுப்புமாறு கூறியுள்ளார், குறிப்பாக இந்த பெண்ணின் செயல் மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாக தான் உள்ளது.

மனோர்
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவிலுள்ளது மனோர் என்னும் கிராமம், அந்தப்பகுதியில் நீரிபாய் படேல் (65) என்பவர் வசித்து வந்தார். இவரது கணவர் தீரஜ் படேல் பக்கவாதத்தால் பாதிகப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார்.

திடீரென காலமானார்
இவர்களது ஒரே மகள் திருமணத்துக்குப் பின்பு குஜராத் மாநிலம் அகமதாபாத்-ல் வசித்து வருகிறார், இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நீரிபாய் கடந்த வாரம் திடீரென காலமானார். மேலும் இதுகுறித்து உடகே மனோர் கிராம மக்கள், அகமதாபாத்-ல் வசித்து வரும் அவரது மகளுக்க தகவல் தெரிவித்தனர்.

நான் ரொம்ப பிஸி
பின்பு அவர் கூறியது என்னவென்றால், நான் ரொம்ப பிஸியாக இருப்பதால் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.மேலும் வாட்ஸ்ஆப் வீடியோ காலில் வந்த அவர் தனது தாயின் முகத்தை காட்டுமாறு அந்த கிராம மக்களிடம் கூறினார், அவர்களுக்கு அவ்வாறே செய்தனர்

கொரியர்
அதற்குபிறகு தனது தாயின் அஸ்தியை கொரியரில் அனுப்புமாறு கிராம மக்களிடம் அந்த பெண் கேட்டுக்கொண்டார். இப்போது அந்த கிராம மக்கள் நீரிபாயின் உடலை தகனம் செய்தனர்.


Click it and Unblock the Notifications








