கூகுளில் தற்கொலை செய்வது எப்படி? என்று தேடிய நபர்.. வளைத்து பிடித்த போலீஸ்.. உளவுத்துறை ரேடாரில் பொதுமக்களா?
கூகுள் சர்ச் என்ஜினில் பொதுமக்கள் பல தகவல்களை தேடி விடை அறிந்துகொள்கின்றனர். கூகுள் (Google) நமது சந்தேகங்களுக்கு விடை அளிப்பதில் எப்போதும் குறைவைத்தே இல்லை. ஆனால், கூகுள் தலத்தில் பொதுமக்கள் தேடி பார்க்கக்கூடாத சில விஷயங்களும் உள்ளது.
அப்படி தெரியாமல் ஒரு விஷயத்தை தேடி, போலீசில் மாட்டிக்கொண்ட சம்பவத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். இப்படியான சம்பவம் நிகழ்வது இயல்பு தான் என்றாலும், உளவுத்துறையின் கண்காணிப்பில் பொதுமக்கள் கண்காணிக்கப்படுகின்றனரா? என்ற கேள்வி நமக்கு எழுந்துள்ளது. சரி, சஸ்பென்ஸ் எல்லாம் வேண்டாம், வாருங்கள் நேரடியாக விஷயத்திற்கு செல்லலாம்.

மும்பையில் ஒருவர் தற்கொலை (Suicide) செய்துகொள்வதற்கான வழிகளை கூகுள் சர்ச் என்ஜினில் தேடியதாக கூறப்படுகிறது. இவர் தேடிய தகவல் மிகவும் மோசமான விஷயம் மற்றும் இந்திய சட்டத்திற்கு புறம்பானது என்பதனால், இவர் இன்டர்போல் (Interpol) ரேடாரில் சிக்கியுள்ளார். இந்திய சட்டத்தின் படி தற்கொலை செய்வது குற்றமாகும். இவர் எப்படி தற்கொலை செய்துகொள்வதென்று கூகுளில் தேடிய 2 மணி நேரத்தில் போலீசாரால் (police) கைப்பற்றப்பட்டார் என்று தெரிந்துகொள்ளலாமா?
மும்பையில் வசிக்கும் இந்த நபர் ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அதற்கு பின் அவருக்கு வேலை கிடைக்காததால் விரக்தியடைந்துள்ளார். இதற்கிடையில், கிரிமினல் வழக்கில் அவரது தாயார் சிறைக்கு (jail) சென்றிருக்கிறார். அவரை ஜாமீன் எடுக்க முடியாமல் சங்கடமடைந்துள்ளார். 28 வயதான மலாட் குடியிருப்பாளர், தற்கொலை செய்துகொள்வதற்கான சிறந்த வழி குறித்து பலமுறை கூகுளில் தேடியுள்ளார்.
கூகுளை கண்காணிக்கும் இன்டர்போல், இவரின் தற்கொலை தேடல் பற்றி உடனடியாக மும்பை போலீசாருக்கு தகவல் கொடுத்தது. குற்றப்பிரிவு போலீசார் இரண்டு மணி நேரத்தில் அந்த நபரை கண்டுபிடித்து அவரை போலீஸ் பாதுகாப்பில் கைப்பற்றியுள்ளனர். செவ்வாய்க்கிழமை நண்பகல் போலீசாருக்கு இன்டர்போலின் மின்னஞ்சல் (mail) வந்தது. அந்த நபர் தனது இணையத் தேடலின் போது பயன்படுத்திய மொபைல் எண்ணையும் (mobile number) இன்டர்போல் பகிர்ந்துள்ளது.
கூட்டு சிபி (குற்றம்) லக்மி கெளதம் மற்றும் மூத்த பிஐ விநாயக் சவான் மற்றும் பிற ஊழியர்களைக் கொண்ட குழு, மொபைல் எண்ணைப் பற்றிய தொழில்நுட்ப நுண்ணறிவைச் சேகரித்து, மலாட்டின் மல்வானியில் வாடகை அறையில் அந்த நபரைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தது. "இரண்டு மணி நேரத்திற்குள், போலீஸ் குழு அந்த நபரைக் கண்டுபிடித்து, குற்றப்பிரிவு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளது.
இணையத்தில் 'தற்கொலைக்கான சிறந்த வழி எது?' என்பது பற்றிய தகவல்களை ஏன் தேடுகிறீர்கள் என்று போலீசார் அந்த நபரிடம் கேட்டபோது, அவர் எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததாக அவர் கூறினார். அவரது ஜாமீனுக்கான சட்டச் செலவுகளுக்கு தன்னால் பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
அதேபோல், அந்த நபர் போலீசாரிடம் கூறுகையில், தான் முதலில் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மும்பை வந்தேன் என்றும் கூறியுள்ளார். ஜூனியர் கல்லூரித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, கணினியில் டிப்ளமோ படித்திருக்கிறார். "மீரா ரோட்டில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தனக்கு வேலை கிடைத்ததாக கூறியிருக்கிறார். இருப்பினும், ஆறு மாதங்களுக்கு முன்பு, அவர் வேலையை விட்டு நீக்கப்படாத கூறியிருக்கிறார்.
பல இடங்களில் முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை என்றும், அதற்காக கவலைப்பட்டதாகவும் கூறினார். நிதிப் பிரச்சனைகள் காரணமாக டென்ஷனாக இருந்ததாகவும், கடந்த இரண்டு நாட்களாக தற்கொலை எண்ணத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். போலீசார் அவருக்கு வேலை தேடித் தருவதாக உறுதியளித்து உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை வைத்து பார்க்கையில், கூகுள் சர்ச் தேடு பொறியில் மக்கள் தேடும் தகவலை இன்டர்போல் தீவிரமாக கண்காணிக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








