பிறந்த நாள் விழாவை விரும்பாதவர் முகேஷ் அம்பானி.! ஏன் தெரியுமா?

கடந்த 1957 ஆம் ஆண்டு பிறந்த முகேஷ் அம்பானிக்கு தற்போது 61 வயது ஆகின்றது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான அவருக்கு 1.5 லட்சம் கோடி சொத்து உள்ளது.

|

இந்தியாவின் செல்வந்தர்கள் குடும்பத்தில் ஒன்று அம்பானி குடும்பம் என்ப்து தெரிந்ததே. நீட்டா அம்பானியில் இருந்து ஆகாஷ் அம்பானி வரை, முகேஷ் அம்பானி மற்றும் மறைந்த திருபாய் அம்பானி வரை அனைவரும் பெரும் செல்வந்தர்களே. முகேஷ் அம்பானியின் அண்டிலியா வீடு உலகின் கவனத்தை பெற்ற ஒன்று ஆகும்.

பிறந்த நாள் விழாவை விரும்பாதவர் முகேஷ் அம்பானி.! ஏன் தெரியுமா?

கடந்த 1957 ஆம் ஆண்டு பிறந்த முகேஷ் அம்பானிக்கு தற்போது 61 வயது ஆகின்றது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான அவருக்கு 1.5 லட்சம் கோடி சொத்து உள்ளது. அவர் அடையாத உயரம் இல்லை, அவர் பெறாத அதிர்ஷ்டம் இல்லை. பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றில் அம்பானிகள் உலகளாவிய அளவில் தங்கள் வியாபார வல்லமை மற்றும் நற்பெயரைப் பெற்றுள்ளனர். அதனால் தான் அவர்கள் உலக அளவில் போற்றப்படுகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக அம்பானியின் ரிலையன்ஸ் மிகப்பெரிய சாதனை லாபத்தை பெற்று வருகிறது. சமுதாயத்திற்கு பல நன்மைகளையும் செய்து வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ டிஜிட்டல் துறையில் காலடி எடுத்து வைத்ததும், நீட்டா அம்பானியின் ரிலையன்ஸ் பவுண்டேஷன் , உலகின் 33வது செல்வந்தர் என்ற இடத்தை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்தது.

1. முகேஷ் அம்பானியின் பிறப்பும் வளர்ச்சியும்:

1. முகேஷ் அம்பானியின் பிறப்பும் வளர்ச்சியும்:

1958ஆம் ஆண்டு தான் அம்பானியின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே அதாவது ஒரு வருடத்திற்கு முன்பே முகேஷ் அம்பானி நான்கு சகோதரர்களில் மூத்த சகோதரராக ஏமன் நாட்டில் பிறந்தார். தெற்கு மும்பையில் இரண்டு படுக்கையறை வசதியுள்ள ஒரு சாதாரண வீட்டில் தான் முதலில் அவர்கள் குடியேறினர். மறைந்த திருபாய் அம்பானி மும்பைக்கு வந்தபோது அவரிடம் இருந்தது வெறும் ரூ.500 மட்டுமே

 2. பிறந்த நாள் விழாவை விரும்பாதவர்:

2. பிறந்த நாள் விழாவை விரும்பாதவர்:

மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டில் இதுவரை அவரது பிறந்த நாளான ஏப்ரல் 19ஆம் தேதி மிகப்பெரிய விழா கொண்டாடியதை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். கடந்த 2007ஆம் ஆண்டு அவருடைய 50வது பிறந்த நாள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவர் ஒரு நல்ல குடும்பஸ்தர் என்பதால் தன்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களை மிகவும் விரும்பியவர்

3. எளிமையை விரும்புபவர்:

3. எளிமையை விரும்புபவர்:

அவரால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் வாங்க முடியும். ஆனால் அவர் ஒரு எளிய நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையையே விரும்புபவர். பெரும்பாலும் அவர் கருப்பு பேண்ட் மற்றும் வெள்ளை சட்டையத்தான் அணிவார். மிக உயர்ந்த ஆடைகள், நவநாகரீக உடைகளை அவர் என்றுமே விரும்பியதில்லை. குடும்பத்தினர்களுடன் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த விருப்பம் கொண்டவர். குறிப்பாக ஞாயிற்றுகிழமைகளில் அவர் குடும்பத்துடன் ரெஸ்டாரெண்ட் சென்று கலாச்சாரமான சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார். அதிலும் கூட அவர் உயர்ரக உணவை எடுத்து கொள்வதில்லை

4. தந்தையை போல் ஒரு இயற்கை விரும்பி:

4. தந்தையை போல் ஒரு இயற்கை விரும்பி:

ஒரு பேட்டியில் தான் தன்னுடைய தந்தையை போலவே இயற்கை ரசிப்பவர் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார். சிறு வயதில் தன்னுடைய தந்தையுடன் காடுகளுக்கு நடந்து சென்று அங்குள்ள அருவிகளை குளித்ததை அவர் ஞாபகப்படுத்துவார். எனவே அவரிடம் உள்ள இந்த இயற்கையை ரசிக்கும் தன்மை அவருடைய தந்தையிடம் இருந்து வந்தது என்பதை சொல்லவே தேவையில்லை

5. தந்தையை போலவே முடிவெடுக்கும் திறன்:

5. தந்தையை போலவே முடிவெடுக்கும் திறன்:

திருபாய் அம்பானியை போலவே முகேஷ் அம்பானியும் ஒரு தந்தையாக தனது கடமையை சரியாக செய்து வருகிறார். தந்தை தனக்கு அளித்த சுதந்திரத்தை போலவே தனது மகன் ஆகாஷ் அம்பானிக்கும் அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியின் பொறுப்பை கொடுத்து அழகு பார்த்து வருகிறார். அதேபோல் அதேபோல் இஷா அம்பானி தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார்

6. திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி:

6. திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி:

மும்பையின் இதயப்பகுதியில் முகேஷ் அம்பானி கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச தரத்தில் ஒரு பள்ளியை தொடங்கினார். ஷாருக்கான், சச்சின் போன்ற பல பெரிய ஸ்டார்களின் குழந்தைகள் இந்த பள்ளிகளில் தான் படித்தனர்.

7. முகேஷ் அம்பானி நிறுவனங்களின் சர்ச்சைகள்:

7. முகேஷ் அம்பானி நிறுவனங்களின் சர்ச்சைகள்:

கடந்த 2014ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் கழிவுகள் தென்னிந்தியாவில் உள்ள ஆற்றில் சுத்திகரிக்காமல் கலந்தது என்பதற்காக $2.3 பில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் கடந்த 2014ஆம் ஆண்டு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியபோது முகேஷ் அம்பானி, பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளையும் நடத்தி இந்தியாவை தனது கட்டுக்குள் வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார்

8. டாக்டர் பட்டம்:

8. டாக்டர் பட்டம்:

கடந்த 2010ஆம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் அளித்த்து. அவருடைய தொடர்ச்சியான வெற்றிக்காக இந்த பட்டம் வழங்கப்பட்டது

9. முகேஷ் அம்பானி நிர்வாக பார்வை:

9. முகேஷ் அம்பானி நிர்வாக பார்வை:

முகேஷ் அம்பானியின் வியாபார திறமையால் தான் தனது முக்கிய நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ரிலையன்ஸ்) நிறுவனத்தை வெற்றிகரமாக கொண்டு செல்கிறார். மேலும் அவர் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான குழுவின் சர்வதேச ஆலோசனை குழுவிலும் பணியாற்றினார். அது மட்டுமல்ல உலக அளவில் அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

10. அடுத்த தலைமுறையின் கனவு ரிலையன்ஸ் ஜியோ:

10. அடுத்த தலைமுறையின் கனவு ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ சந்தேகத்திற்கு இடமின்றி 200 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட ஒரு மிகப்பெரிய வாடிக்கையாளர்களின் நிறுவனம். முகேஷ் அம்பானியின் இரட்டையர்களின் ஆகாஷ் மற்றும் ஈஷா அம்பானி ஆகியோர்களிடம் இந்த ஜியோ நிறுவனத்தை நம்பி ஒப்படைத்துள்ளார். கடந்த டிசம்பர் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜனவரி மாதத்தில் ரூ .504 கோடி லாபம் ஈட்டியுள்ளது என்பது மிகப்பெரிய சாதனையே

Best Mobiles in India

English summary
Mukesh Ambani Top 10 Facts about the Ambani family: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X