இந்தியா: பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடம் பிடித்த அம்பானி- ஜியோ பெயரில் போலி வலைதளம்.!
இப்போது வெளியிடப்பட்ட 100 பேர் கொண்ட பட்டியலில் 4பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
நேற்று இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை, இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி அவர்கள் முதலிடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 11
ஆண்டுகளாக இவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜியோவின் வளர்ச்சிக்கு பின்பு இவரின் சொத்து மதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளது. பின்பு முகேஷ் அம்பானி அவர்களின் சொத்து மதிப்பு சுமார் 47.3 பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலைப் பார்ப்போம்.

பட்டியல்:
முதல் இடம்: முகேஷ் அம்பானி-47.3 பில்லியன்
இரணடாவது இடம்: விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி-21-பில்லியன்
மூன்றாவது இடம்: அர்செலோர் மத்தல் தலைவர் லக்ஷிமி மித்தல்-18.3மில்லியன்
நான்கவது இடம்: ஹிந்துஜா சகோதரர்கள்-18 பில்லியன்
ஐந்தாவது இடம்: பல்லோஜி மிஸ்ட்ரி 15.7-பில்லியன்

4பெண்கள்:
இப்போது வெளியிடப்பட்ட 100 பேர் கொண்ட பட்டியலில் 4பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதில் மிகவும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர் பயோடெக்னாலஜி துறையில் புகழ்பெற்று விளங்கும் கிரண் மஸும்தர் ஷா. அவரின் சொத்து மதிப்புகள் கடந்த ஒரு வருடத்தில் 66.7% என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. அவர் இப்பட்டியலில் 39வது இடம் பிடித்துள்ளார்.

1பில்லியன் டாலர்கள்
சர்வதேச சந்தைகளில் ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்த போதிலும் இந்த பட்டியலில் சுமார் 11 பேர் தங்களின் சொத்து மதிப்பினை 1 பில்லியன் டாலர்கள் வரை அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலி வலைதளங்கள்:
சிலர் ரிலையன்ஸ் ஜியோ பெயரில் போலி வலைதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இந்த வலைதளத்தில் ரூ.599-க்கு லேப்டாப், ரூ.549-க்கு டேப்லெட், ரூ.499-க்கு மொபைல் போன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இதை நம்பி ஏமாறவேண்டாம். குறிப்பாக இந்த வலைதளத்தில் பல்வேறு ஜியோ சாதனங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது, பின்பு பேடிஎம் வசதி கூட இந்த வளைதளத்தில் உள்ளது உஷார்.


Click it and Unblock the Notifications