செயற்கை நுண்ணறிவு பற்றி கருத்து தெரவித்த முகேஷ் அம்பானி.! மனித மூளைக்கு மாற்றாகாது.!
இந்திய விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கும், விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கும் இந்த செயற்கை நுண்ணறிவு கண்டிப்பாக உதவும் என்று முகேஷ் அம்பானி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிநவீன செயற்கை நுண்ணறிவு குறித்த RAISE 2020 என்ற பெயரில் மாபெரும் மெய்நிகர் மாநாட்டை மின்னணு மற்றும்தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து நேற்று முதல் வரும் அக்டோபர் 9-ம் தேதி வரை நடத்துகின்றன.

இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். சர்வதேச செயற்கை நுண்ணறிவுத் துறையின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விவாதங்களை நடத்துகின்றனர். இந்த மாநாட்டில் பேசிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முககேஷ் அம்பானி அவர்கள் செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் மனித மூளைக்கு மாற்றாகாது என்று தெரிவித்துள்ளார்.

மாறாக செயற்கை நுண்ணறிவு மற்றும் 4-வது தொழில்துறை புரட்சியின் பிற தொடர்புடைய தொழில்நுட்பங்கள் இந்தியாவிற்கும் உலகிற்கும் முன்னால் உள்ள அழுத்தமான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நமது திறனை பெரிதும் விரிவுபடுத்தும் என அம்பானி கருத்து தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் வளர்ச்சி பெற தரவுகளே அடிப்படை தேவையாக உள்ளது. எனவே தரவுகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு சிறந்த திட்டம் கொண்டுவரவேண்டும். இந்தியாவில் வளர்ந்துவரும் தகவல் மையங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் முன்னெடுப்புகள் நாட்டில் டிஜிட்டல் புரட்சியை வளர்த்தெடுத்தது. நுண்ணறிவு தரவுகள்தான் மூலதனம்.

குறிப்பாக 1.3பில்லியன் இந்தியர்களை டிஜிட்டலாக தொழில்நுட்பத்தில் வளர்த்தெடுப்பதுதான் வேகமான வளர்ச்சி, சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கும். இந்த கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டெழும் சக்தி இந்தியாவிற்கு உள்ளது என்று தெரிவித்தார்

குறிப்பாக முகேஷ் அம்பானி கூறியது என்னவென்றால், மேக் இன் இந்தியா (Make in India) மூலம், நாட்டிலேயே டிஜிட்டல் சாதனங்கள், சென்சார்கள் மற்றும் பிற சாதனங்களின் மலிவு உற்பத்தி திறனை உருவாக்குகிறோம். அது மட்டுமல்லாமல், உலகத் தரம் வாய்ந்த தரவு மையங்களின் உதவியுடன்,கணினி சக்தியில் இந்தியா உலகத்தை வழிநடத்துகிறது. மேலும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உற்பத்தித்திறன் ஊக்குவிக்கப்படுகிறது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications