அது குகையே கிடையாது.! 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.!
பின்பு கேதார்நாத் மற்றும் பத்திரிநாத் ஆலயங்களை நோக்கியதாக இந்த குகை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குகையில் தங்க இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களில் வழிபட்ட பிரதமர் நரேந்திர மோடி, தனக்கான எதையும் கேட்டு கோவிலுக்கு செல்வதில்லை என்று தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலுக்கு சென்று 30 நிமிடங்கள் சிவனை வழிபட்டார். 2013-ம் ஆண்டு வெள்ளப் பாதிப்புக்கு பிறகு கேதார்நாத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அவர், இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று புனித குகைக்குள் காவி உடையில் விடிய விடிய தியானத்தில் ஈடுபட்டார்.
குறிப்பாக பாரம்பரிய உடையில் காவி துண்டை இடுப்பில் கட்டியப்படி கையில் தடி, தலையில் தொப்பி என சிவன் கோவில் பிரதமர் மோடி வழிபட்டார். மலைப்பகுதியை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி அங்கிருந்த சக மக்களை பார்த்து கைகளை அசைத்ததேடு கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவடத்தில், இமயமலையில் புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.

கெஸ்ட் அவுஸ்
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விடிய விடிய தியானம் செய்ததாக கூறப்படும் குகை ஒரு கெஸ்ட் அவுஸ் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. இதற்காக ஒரு நாள் இரவு வாடகை ரூ990. உத்தரகாண்ட் மாநில அரசு சுற்றுலாத்துறையில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது.

கேதார்நாத்- ருத்ரா
மேலும் கேதார்நாத் கோவிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் கேதார்நாத்- ருத்ரா மெடிடேசன் குகையை உருவாக்கி உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்
பின்பு கேதார்நாத் மற்றும் பத்திரிநாத் ஆலயங்களை நோக்கியதாக இந்த குகை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குகையில் தங்க இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணிநேரமும் பணியாளர்கள் உண்டு
குறிப்பாக இந்த குகையில் மின்சார வசதி, குடிநீர் வசதி கிடைக்கும். காலையில் டீ, டிபன், மதிய உணவு, மாலை டீ, இரவு உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம்.அவசர காலத்துக்கு அழைக்க தொலைபேசி வசதியும் உண்டு. உதவி செய்வதற்கு 24 மணிநேரமும் பணியாளர்கள் உண்டு, அவர்களை அழைக்க காலிங் பெல் வசதியும் இருக்கிறது. ஒருநபர் அதிகபட்சம் 3 நாட்கள் தங்கிக் கொள்ளலாம். 2 நாட்களுக்கு முன்னரே இந்த குகைக்கு புக் செய்துவிட வேண்டும்.

விடிய விடிய தியானம்
குப்தகாசி, கேதார்நாத்தில் உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்த பின்னரே இக்குகையில் தங்க அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் மட்டுமே புக்கிங் செய்ய முடியும். பின்பு இந்த சொகுசு குகையில் (ஹோட்டல்) தான் பிரதமர் மோடி
விடிய விடிய தியானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications