மொபைல் டவர் கதிர்வீச்சு தீங்கு விளைவிப்பதில்லையா? அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா?
மொபைல் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகத் தவறான தகவல் பரவுவது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக 5G சேவையின் அறிமுகம் மிக நெருக்கமான மூலையில் இருப்பதால், 5G நெட்வொர்க்குகள் ஏற்படுத்தும் கதிர்வீச்சுகள் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் மோசமானவை என்று பலர் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைகள் முற்றிலும் தவறானவை மற்றும் தவறான தகவல்களைத் தவிர வேறில்லை என்று AIIMS இன் இணைப் பேராசிரியர் டாக்டர் விவேக் டாண்டன் கூறியுள்ளார்.

மொபைல் டவர் கதிர்வீச்சு ஆபத்தானதில்லையா?
சமீபத்தில், EMF கதிர்வீச்சு பற்றிய ஒரு வெபினார் நடத்தப்பட்டது, அதில் AIIMS இன் இணைப் பேராசிரியர் டாக்டர் விவேக் டாண்டன், செல் டவர்கள் குறைந்த ஆற்றல் கொண்ட அயனியாக்கம் செய்யாத கதிர்வீச்சுகளை மட்டுமே வெளியிடுகின்றன என்று கூறியுள்ளார். இந்த கதிர்வீச்சுகள் மனிதக்குலத்தின் மீது மிகக் குறைவான தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி செல்போன் டவர்கள் மூலம் வெளியாகும் கதிர்வீச்சுகள் பாதுகாப்பானவை தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

செல் டவர் கதிர்வீச்சு முற்றிலும் பாதுகாப்பானதா?
செல் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு முற்றிலும் பாதுகாப்பானது என்று, கர்நாடகாவின் தொலைத்தொடர்புத் துறையின் (DoT) ஆலோசகர் ராகேஷ் குமார் துபே கூறியுள்ளார். கர்நாடகாவின் தொலைத்தொடர்புத் துறையின் (DoT) ஆலோசகர் ராகேஷ் குமார் துபே கூறுகையில், மொபைல் டவர்களால் ஏற்படும் உடல்நலக் கவலைகள் தொடர்பான தவறான தகவல்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. செல்போன் டவர்களில் இருந்து உருவாகும் கதிர்வீச்சுகள் அனைவருக்கும் முற்றிலும் பாதுகாப்பானவை என்று துபே கூறினார்.

தொடர்ந்து கண்காணிக்கப்படும் EMF உமிழ்வு
இந்தியா முழுவதும் உள்ள மொபைல் டவர்களில் இருந்து EMF உமிழ்வு அளவை தொலைத்தொடர்புத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு ஃபீல்ட் யூனிட்டும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்கிறது என்று DoT இந்தியாவின் DDG இணக்கம் எஸ்கே வர்மா தெரிவித்திருக்கிறார். தொலைத்தொடர்பு இடம் அதிகரித்து வருவதால், தவறான தகவல்களால் மொபைல் டவர்களால் ஏற்படும் கதிர்வீச்சு குறித்த அச்சம் பல இந்தியர்களிடையே அதிகரித்து வருகிறது என்பதனால் இந்த தெளிவுபடுத்தும் விளக்கவுரை வெளியிடப்பட்டுள்ளது.

தவறான தகவல் மிக வேகமாகப் பரப்பப்பட்டதா?
கடந்த 2021 ஆம் ஆண்டில், இந்திய நாட்டில் 5G சேவைகள் தொடங்கப்படுவதைச் சுற்றிப் பல தரப்பட்ட தவறான கருத்துக்கள் எழுப்பப்பட்டது மற்றும் இவை மக்கள் மத்தியில் பெரும் கவலையை உண்டாக்க செய்தது. கதிர்வீச்சு காரணமாக 5G சுற்றுச்சூழலுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று பல இந்தியர்கள் தவறாக நம்பினர். சிறந்த முறையில் தவறான தகவல்கள் மட்டும் மிக வேகமாகப் பரப்பப்பட்டதன் காரணமாக, மக்கள் அச்சம் அடையத் துவங்கினர் என்று கூறப்படுகிறது.

மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத அளவுகளில் மட்டும் தான் EMF வெளியாகிறதா?
என்ன தான் போலி தகவல்கள் பெருமளவில் பகிரப்பட்டாலும், மக்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய காரணமும் இல்லை என்று சமீபத்திய அறிவிப்பு கூறுகிறது. செல் டவர்கள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத அளவுகளில் EMF ஐ வெளியிடுகின்றன என்பதை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 5G விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் மொபைல் டவர்கள் மற்றும் சிறிய செல்கள் அல்லது மைக்ரோசைட்டுகள் அமைக்க இந்தியா தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி அறிமுகம் செய்யப்பட்ட நாடுகளில் மக்களுக்கு ஏதும் உடல்நல குறைபாடு இருக்கிறதா?
இதற்கு முன்னதாக இந்த தகவலை இந்தியத் தொலைத்தொடர்பு அதிகாரிகள் வெளியிட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகளில் நேரடி 5G நெட்வொர்க்குகள் அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன என்பதையும் இந்நேரம் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 5ஜி அறிமுகம் செய்யப்பட்ட இந்த நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு எந்தவிதமான கூடுதல் உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் 5ஜி கதிர்வீச்சு காரணமாக சந்திக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications