Home
News

நடுரோட்டில் செல்போனை பறித்து சிட்டாக பறந்த இளைஞர்கள்: மூவரை கைது செய்த போலீஸார்

கடந்த வாரம் இரண்டு நாட்களில் சோமனூர் அருகே உள்ள 21 வயது இளைஞரிடமிருந்து மொபைல் போன் பறித்ததோடு, தொடர்ச்சியாக அடுத்த வீட்டில் இருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலையை பறித்த இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

செல்போனை பறித்து சென்ற இளைஞர்கள்

செல்போனை பறித்து சென்ற இளைஞர்கள்

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் கருமத்தம்ப்பட்டி அருகே உள்ள அன்னூர் சாலையில் டேனியல் என்ற 21 வயது இளைஞர் செல்போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் டேனியலிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.

கொள்ளையர்கள் குறித்து வழக்கு பதிவு

கொள்ளையர்கள் குறித்து வழக்கு பதிவு

டேனியல் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். செல்போனை பறிக்கொடுத்த டேனியல் கருமத்தம்ப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கருத்தம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினர். இந்த நிலையில் அடுத்தநாள் நவம்பர் 20 ஆம் தேதியன்று மூவரும் சோமனூர் அருகே கணேசபுரத்தில் உள்ள ஒரு வயதான பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து இரண்டை சவரன் தங்க நகையை மிரட்டி பறித்து சென்றனர்.

இரண்டு கொள்ளையர்கள் அடையாளம் ஒன்றாக இருந்தது

இரண்டு கொள்ளையர்கள் அடையாளம் ஒன்றாக இருந்தது

செயினை பறிக்கொடுத்த அந்த பெண்ணும் கருமத்தம்ப்பட்டி காவல்நிலையில் புகார் அளித்தார். செல்போன் பறிகொடுத்த அந்த இளைஞரும், செயின் பறிக் கொடுத்த பெண்ணும் திருடர்கள் குறித்து சொன்ன அடையாளங்கள் ஒரே மாதிரியாக இருப்பதை கண்டறிந்த காவல்துறையினர். அந்த வழியே சென்ற வாகனங்கள் குறித்து சோதனை செய்தனர்.

 முரண்பாடான பதிலளித்தவர்கள் கைது

முரண்பாடான பதிலளித்தவர்கள் கைது

அடுத்தடுத்து கோவையில் அரங்கேறிய இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் இரண்டு சிறப்பு குழுக்களை அமைத்தார். இதையடுத்து துணை ஆய்வாளர் அரவிந்தராஜன் தலைமையிலான சிறப்பு குழு, கடந்த சனிக்கிழமை கனியூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த இளைஞரிந் வாகனத்தை தடுத்த அதிகாரிகள் வாகனத்தை சோதனை செய்தனர். மேலும் வாகனத்தில் வந்த இளைஞர்களை சந்தேகப்படும்படியாக இருந்த காரணத்தால் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞர்களை முரண்பாடான பதில்களை வழங்கியுள்ளனர்.

மூவர் கொள்ளையர்கள் என்பதை கண்டறிந்த போலீஸார்

மூவர் கொள்ளையர்கள் என்பதை கண்டறிந்த போலீஸார்

இதையடுத்து இளைஞர்களை கருமதம்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் செல்போன் பறித்த குற்றத்தையும், செயின் பறித்த குற்றத்தையும் ஒப்புக் கொண்டனர். இதில் கருமதம்பட்டியைச் சேர்ந்த சுவர் ஓவியர் எம்.மணிகண்டன்(20) மற்றும் கினாதுகடவு அருகே அரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளி எஸ்.பிரவீன்(21), சிவக்குமார் (21) ஆகிய மூவரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்கள்

மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்கள்

இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சுலூரில் உள்ள நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அதன்பின் மூவரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு பின், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Best Mobiles in India

English summary
Mobile snatching youngster arrested by police in coimbatore
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X