மொபைல்போன் தகவல் பரிமாற்ற அளவு அதிகரிப்பு!

By Super
|
மொபைல்போன் தகவல் பரிமாற்ற அளவு அதிகரிப்பு!

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்குள் மொபைல்போன் தகவல் பரிமாற்ற அளவு 54 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

2ஜி மற்றும் 3ஜி சேவைகளின் பயன்பாடு கணிசமாக உயர்ந்து வருவதால், மொபைல்போன் தகவல் பரிமாற்ற அளவும், அதிகரித்துள்ளது.

பொதுவாக 81 சதவிகிதம் வெப் பிரவுசிங் வசதிக்காகவும், 17 சதவிகிதம் வீடியோ ரெக்கார்டிங் வசதிக்காகவும் 2ஜி நெட்வொர்க் வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 2ஜி நெட்வொர்க் வசதியிக்கு ஒப்பிட்டு பாக்கையில், 3ஜி நெட்வொர்க் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மொபைல்போன்கள் மற்றவர்களை தொடர்பு கொள்வதற்கு என்றிருந்தது. அதன் பிறகு மொபைல்போன்கள் மேசேஜ் போன்ற தகவல் பரிமாற்றத்திற்கு என்றானது. இப்போது 2ஜி வசதியில் தொடங்கி 4ஜி வரை பயன்பாட்டிற்கு வந்தாகிவிட்டது.

இப்படி பல கூடுதல் வசதிகளுக்காக மொபைல்போனின் பயன்பாடுகள் அதிகரித்து கொண்டே வருகிறது. பேசுவதற்காக என்பதை விட, 2ஜி மற்றும் 3ஜி போன்ற நெட்வொர்க் வசதிகளை பயன்படுத்துவதற்காகவே மொபைல்போன் வசதி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

3ஜி நெட்வொர்க் வசதியின் பயன்பாடு 70 சதவிகிதமும், 2ஜி நெட்வொர்க் வசதியின் பயன்பாடு 47 சதவிகிதமும் அதிரித்துள்ளது.இதனால் கடந்த 2011 டிசம்பர் மாதத்திலிருந்து 2012 ஜூன் மாதம் வரையில் மொபைல்போன் தகவல் பரிமாற்றத்தின் அளவும் உயர்ந்துள்ளது.

இந்த முடிவுகளை வைத்து பார்க்கும் போது, மொபைல்போன் தகவல் பரிமாற்றத்தின் அளவு 2013 ஜூன் மாதத்திற்குள் இரண்டு மடங்கு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறிப்பாக சொல்லபோனால், 2ஜி வாடிக்கையாளர்கள் 3 மடங்காகவும், 3ஜி வாடிக்கையாளர்கள் 4 மடங்காகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்

நம்பப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X