செல்போன் பேலன்ஸ் ரூ.20 இருந்தால் உங்கள ஒன்னும் பண்ணமுடியாது...ட்ராய் அறிவித்தது!
இந்தியாவின் தொலைதொடர்புத்துறை கட்டுப்பாட்டகமான ட்ராய் நிறுவனம் புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உங்களுடைய செல்போன் பேலன்ஸ் ரூ.20 அல்லது அதற்கும் மேலாக இருந்தால் உங்களுடைய கணக்கை தகுந்த நிறுவனங்களால் முடக்க இயலாதாது.

அதிலும் நீங்கள் சிம் கார்டை 90 நாட்களுக்கு பயன்படுத்தாமல் இருந்தால்தான் இம்மாதிரி நடக்குமெனவும் தெரிவித்துள்ளது ட்ராய்!
ட்ராய் வெளியிட்ட அறிவிப்பானது இங்கே தரப்பட்டுள்ளது. "மொபைல் பயனாளர்கள் தங்களது சிம்கார்டில் குறைந்தது ரூ.20 இருந்தால் அவர்களது கணக்கை முடக்கக்கூடாது. முன்னரே எச்சரிக்கை தரவேண்டும்." எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், இது ப்ரீப்பேய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். அப்படியே டீ0ஆக்டிவேட் செய்தாலும் 15 நாட்கள் அவகாசம் தரவேண்டும். அந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் மீண்டும் அவர்கள் விரும்பினால் தங்களது கணக்கை அதே எண்ணுக்கே புதுப்பித்துக்கொள்ளலாம் எனவும் ட்ராய் தெளிவுபடுத்தியுள்ளது.
நீங்களும் நல்லா போட்டோ எடுக்கணுமா? அப்போ இதப்பாருங்க!


Click it and Unblock the Notifications