செல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.!
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று - எக்கின்றது திருக்குறள் . ஒருவர் ஏதாவது துறையில் ஆவது முதல்படி புகழ் நோக்கோடு இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் அந்த துறையில் தலை காட்டம
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று - என்கிறது திருக்குறள் .
ஒருவர் ஏதாவது துறையில் ஆவது முதல்படி புகழ் நோக்கோடு இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் அந்த துறையில் தலை காட்டமல் இருப்பது சிறந்தது என்கிறார் வள்ளுவர்.
அப்படி ஒருவர் தான் இந்த தமிழ் அறிஞர் இவரால் தான் நாம் இன்று கணினி மற்றும் செல்போன்களில் தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி வருகின்றோம்.

அவர் மரணம் அடைந்தாலும், நாம் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு எழுத்திலும், அவர் தமிழை வாழ வைத்துள்ளார். மேலும், தான் மரணித்தாலும், தன் தமிழ் மொழியை வாழ செய்துள்ளார் ஒரு உத்தமர்.
இவரின் ஆத்மா இறைவனிடம் சேர முதலில் நாம் பிரார்த்தனை செய்து கொள்வோம்.
இந்த அன்னாரின் தமிழ் பற்றால் நாம் தமிழர் என்று பெருமை கொள்ள வேண்டும்.

கணினி, செல்போன் தமிழ் எழுத்துக்கள்:
நாம் இன்று பரவலாக கணினி மற்றும் செல்போன்களில் தமிழை தட்டச்சு செய்து வருகின்றோம்.
இதற்கு காரணமானவர் சென்னையை சேர்ந்த தமிழறிஞர் பச்சையப்பன். கடந்த சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.

சென்னையை சேர்ந்தவர்:
பச்சையப்பன் சென்னை அடுத்த பழைய வண்ணாரப்பேட்டையை சேரந்தவர். இறக்கும் முன் வயது 85. மேலும் இவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் மற்றும் தமிழ் மொழிக்காப் இறுதி மூச்சு வரை பாடுபட்டவர்.

நாளிதழ்களில் சமஸ்கிருதம் ஆதிக்கம்:
அன்றை காலங்களில் நாம் படிக்கும் செய்திதாள்களில் சமஸ்கிருதத்தில் தான் இருந்தது. இதை தடுத்து தமிழ் மொழிக்காக மாற்றி அமைத்தவர் இந்த பச்சையப்பன்.

கணினி, செல்போன்கள்:
இதைத்தொடர்ந்து, தமிழை கணினி மற்றும் செல்போன்களில் தட்டச்சு செய்ய எழுத்துக்களையும் பச்சையப்பன் உருவாக்கினார்.

ஆதிக்கம் செலுத்தி வந்த ஆங்கிலம்:
செல்போன், கணனினியில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆங்கிலத்தையும் இவர் விரட்டியடிதுள்ளார். இவர் உருவாக்கிய தமிழ் எழுத்துக்களையே நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

சுதந்திர போராட்ட வீரர்:
சுதந்திர போராட்டத்தின் போதும் இவர் பங்கு கொண்டவர் என்பது சிறப்பு. இவர் சென்னையில் சில நாட்களுக்கு முன் மரணம் அடைந்தார்.

தான் இறந்தும் தமிழை வாழ வைத்தவர்:
இவர் இறந்தும் தற்போது தமிழை செல்போன், கணினியில் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார். இவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்திப்போம்.


Click it and Unblock the Notifications