சென்னையில் க்ளவுட் சேவை துவங்கியது மைக்ரோசாப்ட்..!!
மைக்ரோசாப்ட் நிறுவனம் பொதுவான க்ளவுட் சேவையினை தமிழ் நாடு மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் துவங்கியுள்ளது. க்ளவுட் சேவை வெளியானதை தொடர்ந்து இரு மாநிலங்களின் முதல்வர்களும் க்ளவுட் சேவையை வழங்க புதிய டேட்டா சென்டர்களை துவங்கியுள்ளனர்.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கிய வியாபாரங்களை கவனிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்னை, மும்பை மற்றும் பூனே உள்ளிட்ட நகரங்களில் டேட்டா சென்டர்களை துவங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதே முதலீட்டாளர்கள் மாநாட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுமார் 100 தொழிலதிபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு க்ளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மொபைல் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications