மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.!
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் சமீபத்தில் வெளியிட்ட ட்விட்டல் பதிவில் லேசான காய்ச்சல் அறிகுறியுடன் உள்ள எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக பில்கேட்ஸ் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியுடன் பூஸ்டர் டோசும் செலுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகான் நகரில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. அதன்பின்பு தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பின்பு இதனால் அமல்படுத்தப்பட்டஊரடங்கு காரணமாக பலரும் வாழ்வாதாரங்களை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்பு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் சில நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பரபரப்பு தகவலை கூறினார். அதாவது கொரோனா தொற்றின் மிக மோசமான நிலையை உலகம் இதுவரை எதிர்கொள்ளவில்லை. இன்னும் மாறுபாடு ஏற்பட்டு கொரோனா வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை செய்தார்.

அதேபோல் உலக நாடுகள் பெருந்தொற்று தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்க போதிய வசதிகளை கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் சமீபத்தில் தான் சீனாவில் பல பகுதிகளில் கொரோனா பரவல் வேகமாக பரவ ஆரம்பித்தது. எனவே இங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்ந்த நிலையில், சில வாரங்களாக டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. மேலும் விரைவில் நாட்டில் கொரோனா 4-வது அலை பரவக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பின்பு சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கூடுதல் இயக்குநர் சமீரன் பாண்டா, தற்போதைய புள்ளிவிவரங்களை வைத்து மட்டுமே நாடெங்கும் 4-வது அலை தொடங்கிவிட்டது என்று கூறமுடியாது. வைரஸ் பரவல் நாடு முழுக்க ஒரே சீராக இல்லை. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே; தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், மேலும் புதிய திரிபுடன் கூடன் கூடிய கொரோனா வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என்றார்.
தற்போது சில பகுதிகளுக்கு மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன, நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக கொரோனா பரவவில்லை, இதுவரை 4வது எழுச்சிக்கான எந்த அறிகுறியும் இல்லை" என்றும் பாண்டா விளக்கமாக கூறினார்.


Click it and Unblock the Notifications