2019 தொழில் வல்லுநர் பட்டியல்: முதலிடம் பிடித்த இந்தியர்
ஒவ்வொரு ஆண்டும், பார்ச்சூன் இதழ், அந்த ஆண்டின் சிறந்த வணிகர் பட்டியலை தொகுத்து வழங்கும். இந்த பட்டியலை பார்ச்சூன் நிறுவனம் வெளியிட்டது. திறமை, ஆளுமை, தலைமைப் பண்பு, ஒரு குழுவை வழிநடத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியிலில் டாப் 20 பேரை பார்ச்சூன் நிறுவனம் கண்டறிந்து வெளியிட்டுள்ளது.

முதல் மூன்று இடத்தில் இந்தியர்கள்
சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் தொழில் வல்லுநர்கள் பட்டியலில் டாப் 20 பட்டியலை பார்ச்சூன் வெளியிட்டது. இந்த பட்டியலின் முதலிடத்தில் இந்தியாவில் பிறந்தவரான மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாடெல்லா உள்ளார். இந்த டாப் 20 பட்டியலில் மூன்று இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் மாஸ்டர் கார்டு சிஇஓ அஜய் பங்கா, அரிஸ்டா தலைவர் ஜெயஸ்ரீ உல்லால் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

சிஇஓ பதவியை சிறப்பாக செய்துவரும் நாடெல்லா
கணினி ஆய்வாளரான சத்யா நாடெல்லா கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் சிஇஓவாக பணியாற்றி வருகிறார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அஜய் பங்கா மற்றும் ஜெயஸ்ரீ உல்லால் ஆகியோர் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யா நாடெல்லாவிற்கு எதற்கு முதலிடம்
சத்யா நாடெல்லா குறித்து பார்ச்சூன் குறிப்பிட்டுள்ளதாவது, நாதெல்லா. பில்கேட்ஸை போல ஒரு நிறுவனரும் இல்லை, அவரது முன்னோடியான ஸ்டீவ் பால்மரை போல ஒரு பெரிய ஆளுமை கொண்ட விற்பனை தலைவரும் இல்லை இருப்பினும் நாடெல்லா சிஇஓ பொறுப்பை சிறப்பாக செய்து வருகிறார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அஜய் பங்கா மற்றும் ஜெயஸ்ரீ உல்லால் ஆகியோர் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி தொழில் நிறுவனங்களின் ஆளுமைகள்
அதேபோல் இந்த பட்டியலில் உலகின் முன்னணி தொழில் ஆளுமைகள் ஆன புமா நிறுவன சிஇஓ ஜோர்ன் குல்டன் ஐந்தாம் இடத்தில், ஜேபி மோர்கன் சிஇஓ ஜேமி டைமன் பத்தாம் இடத்தையும், அக்சஞ்சர் சிஇஓ ஜூலி ஸ்வீட் பதினைந்தாம் இடத்தில் மற்றும் அலிபாபா சிஇஓ டேனியல் ஜாங் பதினாறாம் இடத்திலும் உள்ளனர்.
Source: livemint.com


Click it and Unblock the Notifications