அகதியாக சென்று பலியான தந்தை- 2வயது மகள்: உலகை கதற விட்ட சமூகவலைதளம்.!
மெக்கிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக குடியேற முயன்ற தந்தையும் அவரது 2வயது மகளும் நீரில் மூழ்கி உயிரிந்தனர். நீரில் மூழ்கி இறந்து கிடக்கும் அவர்கள்து புகைப்படம் உலக நாடுகளிடையே அதிர்வயை ஏற்படு
மெக்கிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக குடியேற முயன்ற தந்தையும் அவரது 2வயது மகளும் நீரில் மூழ்கி உயிரிந்தனர். நீரில் மூழ்கி இறந்து கிடக்கும் அவர்கள்து புகைப்படம் உலக நாடுகளிடையே அதிர்வயை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த புகைப்படம் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடங்களிலும் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து உலக மக்கள் தங்களின் பெரும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். மனித நேய ஆர்வலர்களும் இது மிகுந்த மனவேதனையை உருவாக்கியுள்ளது.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லை:
அமெரிக்கா-மெக்சிகோ இடையே எல்லை 3 ஆயிரத்து 145 கி.மீ நீளம் கொண்டது. எல்லையில் ஏற்கனவே தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணிகள் நடக்கின்றது. 100க்கணக்கான அகதிகள் தடுப்புகளை தாண்டி அமெரிக்காவினுள் நுழைந்து வருகின்றனர்.
இதுதொடர்கதையாக இருந்து வருகிறது. பதவியேற்றது முதலே அகதிகள் நாட்டில் நுழைவதையும் குடியேற்றம் பெறுவதற்கும் கடும் கட்டுப்பாடுகளை டெனால்டு ட்ரம்ப் விதித்து வருகிறார்.

உயிரை பணயம் வைத்த மக்கள்:
மெக்சிகோவில் ஏற்படும் வன்முறை காரணமாக மற்றும் ஏழ்மை காரணமாக அங்கியிருந்து வெளியேறும் மக்கள் அமெரிக்காவில் புகலிடம் தேடுகிறார்கள். தற்போது, அமெரிக்காவில் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக மெக்சிகோவில் இருந்து உயிரை பணயம் வைத்து மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முற்படுகின்றனர்.
உலகம் முழுக்க வரைவான புகைப்படம்:
இந்நிலையில் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக குடியே முயன்ற தந்தையும் அவரது 2வயது மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரீல் மூழ்கி இறந்து கிடக்கும் அவர்களது புகைப்படம் உலக நாடுகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது டுவிட்டரிலும், வேகமாக பரவி வருகின்றது.

நீரில் அடித்து சென்று பலி:
ஆஸ்கர் ஆல்பெர்டோ மார்டின்ஸ் மற்றும் அவரது இரண்டு வயது மகள் டெக்சாஸ் அருகே உள்ள ஆற்றைக்கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
உலக நாடுகள் அதிர்ச்சி:
முகத்தை சேற்றில் புதைத்தப்படி கரை ஒதுங்கிய அவர்களின் உடல்களை பத்திரிக்கையாளர் ஜூலியா என்பவர் படம் பிடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது உலக நாடுகள் இடையே அதிர்வயை ஏற்படுத்தியுள்ளது.

மனிதநேய ஆர்வலர்கள் வேதனை:
அகதிகள் குடியவேறுவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ அரசுகள் எடுத்த கடுமையான நடவடிக்கைகளே இதுபோன்ற உயிரிழப்புகளுக்க காரணம் என்று மனிதநேய ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் சட்ட விரோதமாக உயிணை பிணயம் வைத்து நுழைய வேண்டாம் என்று அமெரிக்கா, மெக்சிகோ அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.


Click it and Unblock the Notifications