அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்: திடீரென வீட்டுக் கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த விண்கல்.!
சில நாட்களுக்கு முன்பு கனடாவில் ஒரு வீட்டின் கூரையை உடைத்து விண்கல் விழுந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கனடாவில் ஒரு பெண் இரவு நேரத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று வீட்டின் கூரையை உடைத்துகொண்டு விண்கல் விழுந்ததாக கூறப்படுகிறது.

வெளிவந்த தகவலின்படி, கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா எனும் பகுதியில் வசித்து வரும் Ruth Hamilton என்பவரின் வீட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.Ruth Hamilton தனது படுக்கையில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது விடியற்காலை 4 மணியளவில் திடீரென்று விண்வெளியில் இருந்து ஒரு விண்கல் வீட்டின் கூரையை உடைத்துகொண்டு விழுந்திருக்கிறது.

குறிப்பாக மிகப்பெரிய விண்கல் ஆனது அந்த பெண் படுத்திருந்த இடத்திற்கு சில அடி தூரத்தில் விழுந்திருக்கிறது. எனவே அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார். அதேபோல் விண்கல் விழும்போது பயங்கர சத்தத்துடனும், புகை மூட்டத்துடனும் இருந்ததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் விழித்து கொண்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து Ruth Hamilton கூறியது என்வென்றால், முதலில் எனக்கு என்ன நடந்தது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. பயங்கர சத்தம் கேட்டதால் படுக்கையில் இருந்து எழுந்து விளக்கை போட்டேன்.

அதன்பின்பு அந்த ராட்சத கல்லை பார்த்து ஆச்சரியத்துடன் நின்றதாக கூறினார். இதைதொடர்ந்து அங்கு கூடியிருந்த பொது மக்கள் அவசர உதவிக்கு கால் செய்து விண்கல் எப்படி விழுந்தது என்று கண்டறிய முயற்சி செய்தனர். ஒருவழியாக விசாரணைக்கு பின்பு அந்தக் கல் விண்வெளியில் இருந்து விழுந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு நாசா சார்பில் ஒரு தகவல் வெளியிடப்பட்டது. அதாவது பூமிக்கு அருகில் உள்ள சிறுகோளை திசை திருப்ப நாசா டார்ட் என்ற விண்கலத்தை தயார் செய்துள்ளது. தூக்கிச் செல்லும் அம்சத்தோடு டார்ட் விண்கலத்தை நாசா தாயார் செய்திருக்கிறது. குறிப்பாக பூமிக்கு அருகில் வரும் சிறுகோளை திசை திருப்பும் பணியை இந்த விண்கலம் மேற்பார்வையிடும். சிறுகோள் என்பது
பூமியை மோதினால் ஏற்படும் அழிவு என்பது நினைத்துக் கூட பார்க்கமுடியாத அளவில் இருக்கும். இதுபோன்ற அபாயத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது எக்ஸ்-கதிர்கள் அல்லது வேறு எதையும் வைத்து சிறுகோளை அழிக்கவோ அல்லது ஆவியாக்கவோ முடியாது என்று கூறப்படுகிறது. ஆனால் புத்திசாலதித்தனமாக நாசா அதை திசை திருப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. எனவே டார்ட் திட்டத்தின் மூலம் இதை செய்ய முடியும். இந்த விண்கலம் இப்போது தயாராக இருக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் நாசாவின் டார்ட் பணி தற்போது லான்ச் பேடை நோக்கி செல்கிறது என்று கூறப்பட்டுள்ளது. பின்பு டார்ட்-ன் குறிக்கோள் குறித்து பார்க்கையில், 15000 மைல் வேகத்தில் பறக்கும் சிறுகோளை திசைதிருப்ப நம்பகமான நுட்பமாக இது தீர்மானிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications