வைரல்: காந்த சக்தியுடன் விவசாயி நிலத்தில் விழுந்த விண்கல்!
பீகார் மாநிலத்தில் உள்ள விவசாய நிலத்தில் பெரிய விண்கல் ஒன்று விழுந்து பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி நிலத்தில் விழுந்த விண்கல்லிற்குக் காந்த சக்தி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மிகுந்த சாதத்துடனும் விண்கல்
பீகார் மாநிலம், மதுபனி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற விவசாய நிலத்தில் கடந்த 22 ஆம் தேதி விண்கல் ஒன்று மிகுந்த சாதத்துடனும் நெருப்புடனும் தரை இறங்கியுள்ளது. நள்ளிரவு 2:30 மணி அளவில் இந்த விண்கல் வானிலிருந்து நெருப்புடன் வயல் நிலத்தில் தரையிறங்கி இருக்கிறது.

5 அடி ஆழத்திற்கு சென்ற விண்கல்
காற்றில் புகை மேகங்களைக் கிளப்பிய வாரு, விண்கல் நெருப்புடன் தரையிறங்கி இருக்கிறது. வயல் நிலத்தில் சுமார் 5 அடி ஆழத்திற்கு விண்கல் பூமியைப் பிளந்துகொண்டு உள்ளே சென்றிருக்கிறது. இந்த விண்கல்லிற்குக் காந்த சக்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 பவுண்ட் எடை கொண்ட விண்கல்
வயல் நிலத்தில் விழுந்த எரிகல்லை, விவசாயிகள் மீட்டுள்ளனர். விவசாயிகள் விண்கல்லை மீட்க முயற்சித்த பொது இரும்பு சாமான்கள் விண்கல்லுடன் ஈர்க்கத்துவங்கியுள்ளன. விவசாயிகள் தோண்டி எடுத்த விண்கல் சுமார் 33 பவுண்ட் எடையுடன் பொன்னிறத்தில் ஜொலிப்புடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட ஆராய்ச்சி
தற்பொழுது இந்த விண்கல் பிஹாரில் உள்ள பீகார் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக அடுத்தகட்ட ஆராய்ச்சிக்காக இந்த விண்கல் பாட்னாவில் உள்ள, ஸ்ரீகிருஷ்ணா அறிவியல் மையத்திற்கு அனுப்பப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications