வானில் நிகழ்ந்த அதிசயம்.! சரியான நேரத்தில் பதிவு செய்த இசைக் கலைஞர்.!
வானில் தினசரி ஏராளமான அதிசயங்கள் நகழ்ந்து கொண்டிருக்கின்றன என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இவற்றை காண நமக்கு கண் கோடி வேண்டும். இருந்தபோதிலும் நம் கண்களுக்கு தென்படும் ஒன்றிரண்டு நிகழ்வுகளை நாம் தவறவிட்டு விடக்கூடாது.

அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஆம்பர் காஃப்மேன் என்ற பெண்மணி ஒர் இரவு நேரத்தில் வெளியே உலா வந்து கொண்டிருந்தால், அந்த சமயம் வானில் எதோ ஒரு வெளிச்சம் வேகமாக பாய்ந்து செல்வதைக் கண்டார்.

உடனடியாக தனது ஸ்மார்ட்போனை எடுத்து வீடியோ எடுத்துள்ளார், இது என்ன ஆச்சரியம் என்று அதைப் பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார், மேலும் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி நமது வாழ்நாளில் காணாத ஒரு விஷயத்தை சிறுது நேரத்திற்கு முன்பு தான் கண்டோம்.
பின்பு அதன் அருமையான சில தருணங்களை நான் படம்பிடித்துள்ளேன், காணக் கிடைக்காத விண்கல் என்று பதிவிட்டுள்ளார், மேலும் பதிவு செய்த இந்த வீடியோ மெக்சிகோவின் தாவோஸ் நகரில் படம்பிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அட்டகாசமான வீடியோவை ரீ-ட்விட் செய்துள்ள விஞ்ஞானி ஜேம்ஸ் ஒ டோனக் என்பவர், இசைக் கலைஞர் ஆம்பர் காஃப்மேன் மிகவும் வேகமாக செயல்பட்டு படம்பிடித்துள்ளார்,நமது வளிமண்டலத்திற்கு விண்கற்கள் வினாடிக்கு 10முதல் 75கிலோமீட்டர் வேகத்தில் நுழைந்திருக்கும்.
இந்த வீடியோவை படம்பிடிக்கும்போது அதன் வேகம் ஒருசில கிலோமீட்டராக குறைந்திருக்க கூடும் எனவும் இதன் வேகத்திற்கு நமது வளிமண்டலமும் தக்க எதிர்வினை ஆற்றியிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த அட்டகாச வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது வரும் ஸ்மாரட்போன்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றன, இதுபோன்ற வானில் நிகழ்ந்த அதிசயம் உட்பட ஏராளமான வீடியோக்களை நாம் பதிவு செய்ய ஸ்மாரட்போன்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications