அதிர வைக்கும் அம்சங்கள் லீடிவி சூப்பர்போன்.!!
உலக சந்தையில் பிதிதாய் அறிமுகமாகி வேகமாக வளர்ந்து வரும் லீடிவி நிறுவனம் லீ 1எஸ் மற்றும் லீ மேக்ஸ் என இரு சூப்பர்போன்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது.
சீனாவில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த கருவிகளின் விற்பனை எண்ணிக்கை ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1 மில்லியனை கடந்திருக்கின்றது. இந்த விற்பனை இண்டர்நெட்டில் சிறந்த விற்பனையை கடந்திருக்கும் கருவியாக இதனை மாற்றியிருக்கின்றது என்றே கூற வேண்டும்.
சீன விற்பனையை தொடர்ந்து இந்நிறுவனம் சமீபத்தில் இந்த கருவிகளை இந்தியாவிலும் வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் ரூ.10,999 மற்றும் ரூ.32,999 என்ற விலைப்பட்டியலில் இந்த கருவிகள் வெளியிடப்பட்டுள்ளன.

சாதனை
அட்டகாசமான அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களும் இணைந்து கடந்த ஆறு மாதங்களில் பிரமிக்க வைக்கும் விற்பனையை லீடிவி சந்திக்க காரணமாக இருக்கின்றன.

கைரேகை ஸ்கேனர்
லீடிவியின் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக கைரேகை ஸ்கேனரை குறிப்பிடலாம். பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கி இருப்பது இதன் வெற்றிக்கு எடுத்து காட்டாகும்.

கண்ணாடி
லீடச் கருவியில் கண்ணாடி மேற்பரப்பு இருப்பதால் கீறல் விழாது என்பதும் குறிப்பிடத்தக்கது. லீ 1எஸ் கருவியில் உலகின் முதல் கண்ணாடி மேற்பரப்பு கொண்ட கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.

ப்ளாஷ் ரிகஃக்னீஷன்
கண்ணாடி மேற்பரப்பு கொண்ட திரை என்பதால் 0.15 நொடிகளில் 99.3 சதவீத துல்லியமாக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படம்
கைரேகை ஸ்கேனர் கொண்டு புகைப்படங்களை எடுக்க முடியும் என்பதால் ஒரே கை கொண்டு புகைப்படங்களை எடுத்து விட முடியும்.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications