சூரியனில் விழுந்த ஓட்டை.! வெறும் கண்ணுக்கே தெரிகிறதா? ஆபத்தில் பூமி.! பீதியில் விஞ்ஞானிகள்.!
பூமியின் ஓசோன் படலத்தில் (Earth Ozone Layer) ஓட்டை இருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். ஆனால், நம்முடைய கிரகத்தின் முக்கிய நட்சத்திரமான சூரியனில் (Sun), பூமியை விட 4 மடங்கு பெரிய ஓட்டை (sunspot) இருப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியாதல்லவா.! - விஞ்ஞானிகளுக்கே இந்த சமாச்சாரம் இப்போது தான் தெரியுமாம்.! சூரியனில் உள்ள இந்த மிகப்பெரிய ஓட்டை பூமி நோக்கி வெடிக்க தயாராக இருப்பதால், அனைவரும் பீதியில் உறைந்துள்ளனர்.

சூரியனில் ஏற்பட்ட மிகப் பெரிய ஓட்டை.! கருப்பு புள்ளியாக வெறும் கண்ணில் பார்ப்பதற்கே தெரிகிறதா?
ஆனால், வானியல் ஆர்வலர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையப்போகிறது. ஏனெனில், இப்போது அவர்களின் தலைக்கு மேலே ஒரு அரிய நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்வைப் மனிதர்கள் பார்க்க, ஒரு தொலைநோக்கியைப் (telescope) பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம், இந்த நிகழ்வை இப்போது மக்கள் வெறும் கண்களிலேயே பார்க்கலாம். உடனே வெளியில் சென்று வெறும் கண்களில் சூரியனை பார்த்துவிடாதீர்கள்.

உடனே வெளியில் சென்று சூரியனை பார்க்காதீங்க.! விஷயத்தை முழுசா படிங்க.!
விஷயத்தை முழுமையாக தெரிந்துகொண்ட பிறகு, இறுதியாக வெளியில் சென்று சூரியனில் இருக்கும் ஓட்டையை பார்க்கலாம்.
சூரியனை உங்கள் வெறும் கண்களால் பார்த்தால், ஒரு கருப்பு புள்ளி (black spot) போன்ற ஓட்டையை உங்களால் இப்போது கவனிக்க முடியும்.
இதுவரை காணப்பட்ட சூரிய புள்ளிகளில் (Sunspot) இது தான் மிகப்பெரிய சூரிய புள்ளி என்று வானியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

பூமியை விட இந்த ஓட்டை 4 மடங்கு பெரியதா?
உண்மையை சொல்ல போனால், இது நான்கு பூமிகளின் (Earth) அளவு கொண்டது என்று கூறப்படுகிறது.
இது இப்போது பூமியின் திசை நோக்கி உருவாகியுள்ளது என்றும் விஞ்ஞானிகள் (Scientists) கூறியுள்ளனர்.
பொதுவாக விஞ்ஞானிகள் சூரியனில் உருவாகும் இத்தகைய புள்ளிகளை சன் ஸ்பாட் (Sunspot) என்று அழைக்கின்றனர்.
சிறிய சன் ஸ்பாட் வெடித்தலே அது பூமிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமாம்.

ராட்சச சூரிய புள்ளி வெடித்தால் பூமிக்கு பெரிய ஆபத்தா?
ஆனால், இப்போது சூரியனில் தோன்றியுள்ள இந்த ராட்சச சூரிய புள்ளி வெடித்தால், அது பூமியை மிகவும் மோசமாக தாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த வெடிப்பின் மூலம் உருவாகும் சூரிய புயல் (Solar storm), மிக வலுவான சூரியப் புயலாக உருவாகும் என்ற கவலையில் விஞ்ஞானிகள் உறைந்துள்ளனர்.
இதனால், தொடர்ந்து பல டெலஸ்கோப்கள் மூலம் இந்த சூரிய ஓட்டையை விஞ்ஞானிகள் இப்போது கண்காணித்து வருகின்றனர்.

AR3190 என்ற சூரிய புள்ளியை கண்டு விஞ்ஞானிகள் பயப்பட என்ன காரணம்.!
தற்போது பல சூரிய புள்ளிகள் பூமியை உற்று நோக்குகின்றன.
இருப்பினும், AR3190 என்ற சூரிய புள்ளியானது நான்கு பூமிகளை இணைத்துள்ளதைப் போல அகலமானது மட்டுமல்லாமல்; தற்போது காணக்கூடிய மற்ற சூரிய புள்ளிகளை விட இரண்டு மடங்கு பெரிதாம்.!
சூரியனை நிமிர்ந்து பார்த்தால் எவரும் இந்த சூரிய புள்ளியை பார்க்க முடியும் அளவிற்கு இது பெரிதாக உள்ளது. ஆனால், எச்சரிக்கையாக இருங்கள்.!

வெறும் கண்ணில் பார்த்தால் கண்கள் குருடாகுமா? என்னப்பா சொல்றீங்க.!
சூரியனில் இருக்கும் கருப்பு புள்ளியை பார்க்கும் ஆர்வத்தில் பாதுகாப்பான சோலார் கண்ணாடிகள் அணியாமல் இதைப் பார்த்துவிடாதீர்கள்.
ஏனெனில், இது உங்கள் கண்களை சேதப்படுத்தும் அல்லது உங்களை நிரந்தரமாகக் குருடாக்கும் அளவிற்கு மோசமானது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பாதுகாப்புடன் இந்த சூரிய புள்ளிகளைப் பார்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது மக்களே.!

இந்த சூரிய புள்ளி வெடித்தால் பூமிக்கு என்ன ஆபத்தெல்லாம் நிகழும்.!
சூரிய புள்ளி எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்பதால் பூமி வாசிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
இதன் விளைவாக உருவாகும் சூரிய புயல் செயற்கைக்கோள்களை (satellite) சேதப்படுத்தும், ஜிபிஎஸ் (GPS), மொபைல் நெட்வொர்க்குகள் (mobile network), வயர்லெஸ் தொடர்பு (wireless connectivity) மற்றும் இணையத்தின் (internet) பிற வடிவங்களை அழிக்கலாம்.
அது மட்டுமின்றி, இது பவர் கிரிட் (power grid) செயலிழப்பை ஏற்படுத்தும்.

பூமியில் இவ்வளவு பெரிய மாற்றம் உருவாகுமா?
பேஸ்மேக்கர் (Pacemaker) மற்றும் வென்டிலேட்டர்கள் (Ventilator) போன்ற சாதனங்களும் செயல் இழக்கும்.
அதேபோல், பூமியில் உள்ள பல முக்கியமான மின்னணு சாதனங்களில் இது செயலிழப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இப்போதைக்கு, நாசா மற்றும் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் உட்பட பல்வேறு தொலைநோக்கிகள் சூரிய புள்ளியை கவனமாகக் கவனித்து வருகின்றன.

சூரிய புள்ளி வெடிக்க கூடாதென்று வேண்டுதல் வைக்கும் விஞ்ஞானிகள்.!
இருப்பினும், இந்த சூரிய புள்ளி, பூமியை எதிர்கொள்ளும் போது வெடிக்காமல் இருக்க வேண்டும் என்பதே நமது ஒரே நம்பிக்கையாக இருக்கிறது.
அப்படி வெடித்தால், மேற்க்கூறிய அழிவுகள் கட்டாயம் நிகழும் என்று விஞ்ஞானிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உருவான சூரிய புயல்களில் இது தான் மிகவும் மோசமானதாக இருக்கக் கூடும் என்பதனால் விஞ்ஞானிகள் பீதியில் உறைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








