இணைய இணைப்பு பெறுவது மனிதர்களின் உரிமையாம் மார்க் சூக்கர்பெர்க் சொல்லிட்டாரு
இந்தியாவில் இணையம் குறித்த விழாவில் பேசிய பேஸ்புக் தலைவர் மார்க் சூக்கர்பர்க் இந்தியாவில் இணைய இணைப்பை மேம்படுத்த பேஸ்புக் கடுமையாக முயற்சித்து வருவதாக தெரிவித்தார். இணைம் ஒவ்வொருவரின் உரிமை என்றும் அனைவரக்கும் பயன்படும் விதத்தில் இணையதளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். காமெடி படங்கள்
ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இந்தியர்கள் அதிகளவில் இணையதளம் பயன்படுத்தாதற்கு காரணமே உள்ளூர் மொழிகளில் தகவல்கள் இல்லாததே ஆகும். இரண்டு நாள் பயனமாக இந்தியா வந்திருக்கும் மார்க் மேலும் கூறியதாவது. 80% இணையதள தகவல்கள் 10 மொழிகளில் மட்டும் தான் இருக்கிறது உள்ளூர் மொழிகளில் இணையதள தகவல்கள் இல்லாதது இந்தியர்களை இணையம் பார்ப்பதை வெகுவாக குறைத்து விடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்
இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதாகவும் இணையதளத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும், இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமானவர்கள் இணையத்தை பயன்படுத்துவதில்லை. இந்தியாவின் கிராமபுறங்களில் இணையத்தை கொண்டு சேர்க்க பேஸ்புக் முயற்சிக்கிறது என்று தெரிவித்த மார்க் சூக்கர்பெர்க் மங்கள்யான் வெற்றிக்கும் தன் வாழ்த்துகளை தெரிவித்தார். மார்க் வெள்ளி கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமி்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications