சொன்னா கேட்கனும்., தூக்கிட்டு போயிட்டான்ல., செல்பிக்கு போஸ் கொடுத்த பெண் பறிபோன செல்போன்- வீடியோ
இப்போதெல்லாம் இங்கு புகைப்படம் எடுக்காதிர்கள் என்பதற்கு பதிலாக இங்கு செல்பி எடுக்காதிர்கள் என்ற எச்சரிக்கை பலகையே அதிகமாக இருக்கிறது. செல்பி எடுக்கும் நேர்ந்த பிரச்னைகளை தாண்டி உயிரிழப்பும் நேர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

சாலையோரம் நின்று செல்பி
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு பெண் தோழியுடன் சாலையோரம் நின்று செல்பிக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்துள்ளார் அப்போது அந்த பக்கம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் செல்போனை பறித்துச் சென்றான்.

2 இளம்பெண்கள் நின்று செல்பி
இந்த நிகழ்வானது ஜலந்தர் பகுதியில் முக்கிய கடை வீதி ஒன்றில் கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது. கார் ஷோரூம் வெளியே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரின் முன்னாள் 2 இளம்பெண்கள் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர்.
கையில் இருந்த செல்போனை பறிப்பு
அந்த சமயத்தில் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபர், பெண்களுக்கு அருகில் சென்று அவர்கள் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக சென்றுவிட்டான்.

சிட்டாக பறந்த திருடன்
அந்த பெண் சுதாரிப்பதற்குள் ரெட் ஜாக்கெட் தொப்பி அணிந்தபடி வந்த அந்த இளைஞன் சிட்டாக பறந்துவிட்டான். அதன்பின் அந்த இடத்தில் கூட்டம் கூடியது. தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Courtesy: dailymail.co


Click it and Unblock the Notifications








