Just In
- 1 hr ago
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
- 2 hrs ago
உங்கள் WiFi சிறப்பா.. ஸ்பீடா.. செயல்பட இந்த 5 விஷயத்தை செய்யணும்.! உடனே ட்ரை செய்து பாருங்க.!
- 3 hrs ago
Tech Tips: வாட்ஸ்அப்பில் இன்னொரு ஷார்ட்கட்.. இனிமேல் வாட்ஸ்அப் கால் செய்யும் போது..?
- 3 hrs ago
இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
Don't Miss
- News
வேட்பாளரை பொதுக்குழுவே முடிவு செய்யும்.. தீர்ப்பால் யாருக்கு "சாதகம்".. 7 முக்கியமான பாயிண்ட்ஸ்!
- Finance
சவூதி அரேபிய வெளியிட்ட செம அறிவிப்பு.. இலவச விசா..!
- Automobiles
சம்பாதித்த பெரும் தொகையை சிங்கப்பூர் நிறுவனத்தில் கொட்டும் டிவிஎஸ்.. இதனால இந்தியால என்ன நடக்கபோகுது தெரியுமா?
- Movies
திரைத்துறையில் 11 ஆண்டுகளை கடந்த சிவகார்த்திகேயன்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
- Sports
"கோலியின் நடுவிரல் முதல்.. ஹர்பஜனின் தடை வரை" பார்டர் கவாஸ்கர் கோப்பை ஏன் முக்கியம்?.. 5 சர்ச்சைகள்
- Lifestyle
உங்க துணையிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பாலியல் அடிமைத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறார்களாம்... உஷார்!
- Travel
இந்தியாவிலிருந்து இலவசமாக ஹாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமா? இப்படி செய்தால் போதும்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட்போன் வாங்க மாட்டை விற்ற தந்தை!
இமாச்சல் பிரதேசத்தில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குல்தீப் குமார் என்பவர், தனது குழந்தைகளின் ஆன்லைன் படிப்பிற்காக புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக தன்னிடம் இருந்த ஒரே வருமான ஆதாரமான மாட்டை வெறும் ரூ.6,000 விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.

குல்தீப் குமார் ஜ்வாலமுகியில் உள்ள கும்மர் கிராமத்தைச் சேர்ந்தவர். மார்ச் மாதத்தில் ஊரடங்கு துவங்கப்பட்ட நிலையில், பள்ளிகளும் மூடப்பட்டன. இவரது குழந்தைகள் அன்னு மற்றும் திப்பு நான்காம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பில் படித்து வந்தனர். பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியதும், குழந்தைகளுக்குப் படிப்பைத் தொடர ஸ்மார்ட்போன் வாங்கப் பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நாட்களில் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தனது குழந்தைகளின் படிப்பு தடைபட்டுவிடக்கூடாது என்று குலதீப் ஸ்மார்ட் போன் வாங்க ஊரில் உள்ள வங்கி மற்றும் தனி நபர் என்று அனைவரிடமும் ரூ .6,00 கடன் கேட்டிருக்கிறார். ஆனால் அவரது மோசமான நிதி நிலைமை காரணமாக, யாரும் அவருக்கு உதவத் தயாராக இல்லை. இருப்பினும் குல்தீப் மனந்தளரவில்லை.

பள்ளிகள் மூடப்பட்டதிலிருந்து ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் குழந்தைகளின் படிப்பைத் தொடர விரும்பினால் ஸ்மார்ட்போன் கட்டாயம் தேவை என்று கூறியுள்ளனர். குறிப்பாக அவரிடம் ரூ .500 கூட இல்லாத நிலையில் ரூ.6,000 ஏற்பாடு செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் என்றும் ஆசிரியர்களிடம் எடுத்துரைத்ததாகக் கண்ணீருடன் கூறியுள்ளார்.
|
அவர் முடிந்த வரை எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார், ஆனால் பணம் மட்டும் கிடைக்கவில்லை, குழந்தைகளின் கல்வி தடைப்படக் கூடாது என்பதற்காகத் தனது மாட்டை ரூ .6,000 க்கு விற்கமுடிவு செய்திருக்கிறார். அதேபோல், குழந்தைகளின் படிப்பிற்காகத் தனது ஒரே வருமானமாக இருந்த மாட்டை விட்டு ஆன்லைன் வகுப்பிற்காக ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளார்.

குல்தீப் தன்னிடம் இருந்த மாட்டை வைத்து தான் பால் விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கதையைக் கேட்ட பலரும் உதவ முன்வந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சோனு சூத் இந்த செய்தியைத் தந்து டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மாடுகளை திரும்பப் பெற உதவ முன்வந்துள்ளார், மேலும் குலதீபின் விவரங்களைப் பற்றியும் தனது ட்வீட்டில் கேட்டுள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470