போனில் பேசியபடி மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து '23' வயது புது மாப்பிள்ளை பலி!

|

நொய்டாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர், போனில் பேசிக்கொண்டே மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியினரைத் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

நண்பருடன் மூன்றாவது மடியில் குடியிருந்த குமார்

நண்பருடன் மூன்றாவது மடியில் குடியிருந்த குமார்

நொய்டாவில் உள்ள 27வது செக்டர் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பில் தனது நண்பர் அமித் குமாருடன் சேர்ந்து குடியிருந்திருக்கிறார் குமார்(23). மூன்றாவது மாடியில் தங்கி இருந்த குமார், செக்டர் 18 பகுதியில் உள்ள ஒரு பலகாரக்கடையில் சமையல்காரராக பணியாற்றி வந்திருக்கிறார்.

புது மாப்பிளை

புது மாப்பிளை

நொய்டாவில் பணியாற்றிவரும் குமாருக்கு ஒரு மாத காலத்திற்கு முன்பு தான் திருமணம் ஆகியுள்ளது. தனது சொந்த ஊரில் இருக்கும் மனைவியுடன் போனில் உரையாடிய பொது தான் அவர் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

<span style=மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.! " title="மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.! " loading="lazy" width="100" height="56" />மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.!

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்

சம்பவம் நடந்த பொது, அருகில் உள்ள மக்கள் அவர் மாடியிலிருந்து விழுந்ததை நேரில் பார்த்திருக்கின்றனர். இந்த சம்பவம் புதன்கிழமை மலை 4.30 மணி அளவில் நடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

<span style=ஏலியன் இரகசியங்களை அறிய ஏரியா 51-ஐ புயலென தாக்கவுள்ள மக்கள்! " title="ஏலியன் இரகசியங்களை அறிய ஏரியா 51-ஐ புயலென தாக்கவுள்ள மக்கள்! " loading="lazy" width="100" height="56" />ஏலியன் இரகசியங்களை அறிய ஏரியா 51-ஐ புயலென தாக்கவுள்ள மக்கள்!

பரிதாபமாக உயிர் இழந்தார்

பரிதாபமாக உயிர் இழந்தார்

மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று இருக்கின்றனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிர் இழந்திருக்கிறார். மருத்துவர்களும் அவரின் உடலைச் சோதித்துப் பார்த்து இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

<span style=செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.! " title="செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.! " loading="lazy" width="100" height="56" />செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.!

 சந்தேகத்தின் பெயரில் விசாரணை

சந்தேகத்தின் பெயரில் விசாரணை

தற்பொழுது குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளது. அவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே குமார் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தான் உயிர் இழந்தாரா? என்று போலீஸ் சந்தேகத்தின் பெயரில் விசாரணையை துவங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
man falls to death from 3rd floor talking on phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X