மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்! என்ன நடந்தது தெரியுமா?
கோயில் கட்டுமானத்தில் தொழிலாளியாக வேலை பார்த்தவரின் மொபைல் போன் வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சமத்துவம் மொபைல் போன் பயனர்களிடையே பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. மொபைல் போன் வெடித்ததற்கு கரணம் என்னவென்று போலீசார் யூகித்துள்ளனர்.

கட்டுமான தொழிலாளி
ஒடிசா மாநிலத்தின் நாயகர் மாவட்டத்தில் உள்ள ரான்பூர் கிராமத்தைச் சேர்ந்த குனா பிரதான்(22) என்பவர் தனது மொபைல் போனை இரவு உறங்கும் பொழுது சார்ஜ் செய்துள்ளார். பரதீப்பில் ஜகந்நாத் கோயில் கட்டுமானத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்த கோவிலை ஜெகந்நாத் டிரக் உரிமையாளர்கள் சங்கம் கட்டி வருகிறது.

தலையணை அருகேயே மொபைல்
குனா பிரதான் இங்குள்ள கட்டுமான தொழிலார்களுடன் தங்கி பணிபுரிந்து வந்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு பரதீப்பில் உள்ள ஒரு அறையில் தனது மொபைல் போனை சார்ஜ் செய்துள்ளார். இரவு உறங்கும் பொழுது தனது தலையணை அருகேயே மொபைல் போனை சார்ஜிங் இல் வைத்துள்ளார்.

காரணம் இதுதான்
உறங்கிக்கொண்டிருந்தவரின் தலை அருகே சார்ஜிங் இல் இருந்த மொபைல் போன் வெடித்ததில் குனா பிரதான் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். தலையணை அடியில் சார்ஜிங் இல் இருந்த மொபைல் 'ஓவர்-ஹீட்' காரணத்தினால் வெடித்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. அதிகாலை 5 மணி அளவில் இந்த சமத்துவம் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிதமாக மரணம்
இந்த அசம்பாவிதம் குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குனா பிரதானின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உறங்கும் பொழுது மொபைல் போன்களை படுக்கைக்கு அருகில் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுரைக்கப்படுகிறது.
source: newindianexpress.com


Click it and Unblock the Notifications