இது புதுசா இருக்கே: தர்பூசணியை இசைக்கருவியாக மாற்றிய இசைக்கலைஞர்.! வைரல் வீடியோ.!
பொதுவாக இசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும், பயணங்கள், தனிமை போன்ற அனைத்து நேரங்களிலும் இந்த இசைதான் நம் உடன் அதிகமாக இருக்கும்.சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் எங்கும் இருக்கும் இசை எதிலும் இருக்கும் இசை.

இப்போது மக்கள் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றனர் என்றுதான் கூறவேண்டும், அதை மெய்ப்பிக்கும் வகையில், இசைக்கலைஞர் ஒருவர் தர்பூசணி, கிவி பழத்துண்டுகளை வைத்து இசையமைத்து வரும் வீடியோ தற்போது அனைத்து தளங்களிலும் வைரலாகி வருகிறது.

சரியாக மூன்று நிமிடம் கால அளவிலான இந்த அட்டகாச வீடியோவில் பியோனா கீகளாக தர்பூசணி மற்றும் கிவி பழத்துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்பு டிரம்ஸ்கள்,கால்கள் மூலம் இசைக்கப்படுகிறன்றன.

பின்பு இந்த பழத்துண்டுகளுக்கு ஏற்றவகையில், வாட்டர்மெலான என்ற பாடலை நீச்சல்குளத்தில் அமர்ந்தவாறு வாசிக்கும் இந்தஇசைக்கலைஞர், இறுதியில் அந்த பழத்துண்டுகளை சுவைக்கிறார்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த பழத்துண்டுகள் கீபோர்ட் நோட்ஸ்களை ப்ரி டியுன்களாக சிந்தசைஸ்செய்துள்ளன, மேலும் பழத்துண்டுகளை தொடும்போது அது கணினி அல்லது மொபைல் போனில் பாடலாக ஒலிக்கின்றதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு சர்க்கியூட் போர்டு, அல்லிகேட்டர் கிளிப்ஸ், யுஎஸ்பி கேபிள்கள் இவற்றுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மாகே
மாகே என்று பிரபலமான எலெக்ட்ரானிக் இன்வென்சன் கிட்கள் குறித்தும் இந்த வீடியோவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்சமயம் இந்த அட்டகாச வீடியோவை சுமார் 5மில்லியனுக்கு மேற்பட்ட முறை மக்களால் பார்க்கப்பட்டுள்து என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற இசைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications