ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பெண்ணிடம் 20 லட்சம் பறிப்பு.!
ஆன்லைன் திருமண தகவல் மையத்தை நம்பி வரன் பார்ப்பவர்கள் கவனத்திற்கு, ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் வரன் பார்த்த மாப்பிள்ளை, பெண்ணிடம் பழகி ஏமாற்றி அவரிடம் இருந்து ரூ.2,00,000 வரை மோசடி.
ஆன்லைன் திருமண தகவல் மையத்தை நம்பி வரன் பார்ப்பவர்கள் கவனத்திற்கு, ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் வரன் பார்த்த மாப்பிள்ளை, பெண்ணிடம் பழகி ஏமாற்றி அவரிடம் இருந்து ரூ.2,00,000 வரை மோசடி செய்துள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது.

ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய என்ஜினியர்
திருச்சி அருகே லால்குடி பகுதியில் வசிக்கும் அரசு பெண் மருத்துவரிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய என்ஜினியரைகாவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஆன்லைன் திருமண மையத்தில் மணப்பெண் தேவை விளம்பரம்
திருவண்ணாமலை பகுதியில் வசிக்கும் பொறியாளரான சக்ரவத்தி(34), கட்டுமானம் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்குத் திருமணம் ஆகி மனைவி, மகள் இருக்கும் நிலையில் ஆன்லைன் திருமண மையத்தில் மணப்பெண் தேவை என்று போலி அடையாளங்களுடன் பதிவு செய்துள்ளார்.

ரூ.2 லட்சம் வரை களவாடிய என்ஜினியர்
திருமண தகவல் மையம் மூலம் இவரின் வரன், அரசு பெண் மருத்துவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அப்பெண்ணிடம் பேசி பழகி ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ரூ.2 லட்சம் வரை களவாடியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் முன்பே திருமணமாவர் என்ற உண்மை தெரிந்த பெண் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

வரன் பார்க்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு
சக்ரவத்தி மற்றும் ஆன்லைன் திருமண மையத்தின் மேல் அப்பெண் புகார் அளித்துள்ளார். சக்ரவர்த்தியை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். ஆன்லைன் இல் வரன் பார்க்கும் பெற்றோர்கள் கவனமாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications