Home
News

இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்?

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின் படி 2018-2019-ம் ஆண்டு நிதியாண்டில் அதிகபட்சமாக தலைநகர் டில்லியில் ஏடிஎம் மோசடி தொடர்பாக 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சமீபதத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தின் அடிப்படையில் ஏடிஎம் மோசடியில் நாட்டிலேயே மகாராஷ்டிரா தான் முதலிடத்திலல் உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 233 வழக்குகள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் 233 வழக்குகள்

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 233 வழக்குகள் பதிவாகி உள்ளன. டில்லி ஏறக்குறைய ரூ.2.9 கோடியை ஏடிஎம் மோசடியில் இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிரா ரூ.4.81கோடியை இழந்துள்ளது.

 ரூ.3.63 கோடியை இழந்துள்ளது

ரூ.3.63 கோடியை இழந்துள்ளது

மூன்றாவது இடத்தில் உள்ள நம்ம தமிழகம் ரூ.3.63 கோடியை இழந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஏடிஎம் மோசடி நடந்த மாநிலங்களின் பட்டியலில் இடம்பெறாத மாநிலங்கள் அசாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா மட்டுமே. இந்த மாநிலங்களில் ஒரு ஏடிஎம் மோசடி கூட நடந்தது இல்லை.

2017-2018-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில்..

2017-2018-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில்..

2017-2018-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2018-2019-ம் நிதியாண்டில் ஏடிஎம் மோசடியால் இழந்த தொகையின் எண்ணிக்கை ரூ.21 கோடியாக குறைந்துள்ளது 2017-2018-ம் ஆண்டில் ஏடிஎம் மோசடியில் ரூ.65.3 கோடி பண இழப்பு நடந்துள்ளது. அதிகப்படியான ஏடிஎம் மோசடிகள், ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி, ஏடிஎம் கார்டு தகவல்களை காப்பி செய்வது நடக்கிறது என தெரியவந்துள்ளது..

 வங்கி ஏஜெண்ட்

வங்கி ஏஜெண்ட்

மேலும் பாதுகாவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களில் வரும் மிஷனை பயன்படுத்த தெரியாதவர்களை குறிவைத்து, ஏடிஎம்
கார்டுகளை மாற்றியும் மோசடிகள் நடக்கின்றன, போலி கால்சென்டர்கள் மூலம், வங்கி ஏஜெண்ட் என கூறி அவர்களின் வங்கி கணக்கு விபரங்களை பெற்றும் மோசடி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 புதுவிதமான மின்னணு கருவி

புதுவிதமான மின்னணு கருவி

இந்நிலையில் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஹாலிடே எனும் சொகுசு விடுதியில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த மூவர் தங்கியிருப்பதாகவும் அவர்கள் வெளியே செல்லும்போது புதுவிதமான மின்னணு கருவிகளை உடன் கொண்டு செல்வதாகவும் அவர்களது நடவடிக்கைகளும் சந்தேகத்துகிடமாக இருப்பதாகவும் கண்ணகி நகர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை

விமான பயணச்சீட்டையும் கைப்பற்றினர் ஏற்கனவே சில ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணத்தைத் திருடிய பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், உஷாரான போலீசார், ஹாலிடே விடுதிக்கு விரைந்தனர். பின்பு அங்கு தங்கியிருந்த பல்கேரியா நாட்டைச் சேர்ந்த லிபோமிர், (lyubomir) போரிஸ் ,(Boris) நிக்கோலே, (NIkolay) ஆகியோரின் உடமைகளை சோதனையிட்டபோது 40க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் அட்டைகள், 7.5 லட்ச ரூபாய் , 10 ஆயிரம் டாலர் ,
போலி கார்டு தயாரிக்கும் மெஷின், லேப்டாப், செல்போன்கள், 3 சூட்கேஸ் ஆகியவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஞாயிற்றுக்கிழமை பல்கேரியா செல்வதற்கான விமான பயணச்சீட்டையும் கைப்பற்றினர்.

18 லட்ச ரூபாய் வரை

18 லட்ச ரூபாய் வரை

18 லட்ச ரூபாய் இதுவரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி, வெளிநாட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து 18 லட்ச ரூபாய் வரை பல்கேரியர்கள் திருடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருடியது தொடர்பாக கைது செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவின் வங்கி தடுப்பு மோசடி தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டனர்.விசாரணைக்குப் பின் மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அது பல்கேரிய தூதரகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Best Mobiles in India

English summary
Maharashtra tops in ATM frauds Delhi Tamil Nadu Karnataka follow: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X