லஷ்கர்-இ-தலிபான் பெயரில் வை-பை: அலறிய மக்கள்: சிக்கிய குற்றவாளி.!
இதைத்தொடர்ந்து போலீசாரும் இந்தியா முழுவதும் முழுவீச்சி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த இக்காடான சூழ்நிலையில் லஷ்கர்-இ-தலிபான் என்ற பெயரில் வை-பை பெயர் இருந்தால் மக்கள் அதிர்ச்சி
காஷ்மீரில் சிஆர்பிஎப் வாகனத்தின் மீது வெடி குண்டு நிரப்பிய தாக்குதல் நடத்தியத்தில் 44 வீரர்கள் சம்பவ இடத்தில் உடல் சிதறி பலியாகினர். மேலும், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவுக்கு தங்களது ஆறுதல்களையும் பாகிஸ்தானுக்கு எதிரான கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து போலீசாரும் இந்தியா முழுவதும் முழுவீச்சி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த இக்காடான சூழ்நிலையில் லஷ்கர்-இ-தலிபான் என்ற பெயரில் வை-பை பெயர் இருந்தால் மக்கள் அதிர்ச்சியடைந்து ஓடினர்.
இந்த குற்றத்தில் ஈடுபட்டவரை போலீசார் விசாரைணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

44 வீரர்கள் பலி:
காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சிஆர்பிஎப் வீரர்கள் சுமார் 2500 பேர் ராணுவ வாகனங்களில் சென்று சென்று கொண்டிருந்தனர். அப்போது, வெடிகுண்டு நிரம்பிய வாகனத்தில் வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவரன் கான்வாயில் மோதி வெடி குண்டை வெடிக்க செய்தான். இதில், சம்பவ இடத்தில் 44 வீரர்கள் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்துள்ளனர்.

2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
புல்வாமா மாவட்டத்தில் பிங்கலன் (Pinglan) என்ற பகுதியில், பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் 3 ராணுவ வீரர்கள் என 4 பேர் வீரமரணமடைந்தனர்.
அதேசமயம், 3 தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு, அவர்களை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மூளையாக செயல்பட்ட கம்ரான் என்ற தீவிர உட்பட 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.

லஷ்கர்-இ-தலிபான் பெயரில் பை-பை:
மும்பையில் இளைஞர் ஒருவர் தமது வை-பை சிக்னல் பெயரை லஷ்கர்-இ-தலிபான் என மாற்றியதைத் தொடர்ந்து சக குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அதிர்ச்சியடைந்த மக்கள்:
கல்யாண் என்ற இடத்தில் உள்ள அம்ருத் ஹெவன் காம்ப்ளெக்ஸ்-ல் அடுக்குமாடிக் குடியிருப்பும் அமைந்துள்ளது. அங்கு நேற்று வை-பை இணைக்க முயற்சித்த ஒரு இளைஞர், தமது வீட்டுக்கு அருகே லஷ்கர் - இ - தலிபான் என்ற பெயரில் மற்றொரு வை-பை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வாட்ஸ் ஆப் குழுவில் பகிரப்பட்டது:
உடனடியாக தமது குடியிருப்புக்கான வாட்ஸ் ஆப் குழுவில் இதைப் பகிர்ந்து எச்சரித்ததும் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் 20 வயதான ஒரு இளைஞரை பிடித்த போலீசார், அவனை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

உடனடி நடவடிக்கை:
தமது வை-பையை யாரும் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக விளையாட்டுக்காக அவ்வாறு மாற்றிவைத்ததாக தெரிவித்தார். தீவிர விசாரணையில் அதை உண்மை என அறிந்த போலீசார் இளைஞரை கடுமையாக எச்சரித்து திருப்பி அனுப்பினர்.


Click it and Unblock the Notifications