"ஆன்லைன் சரக்கு" விற்பனைக்கு அனுமதி.! "டோர் டெலிவரி" வசதியும் உண்டு.!
மாநில மசோதாவின் அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே, நேற்று பத்திரிகையாளர்களிடம் மதுபான்களை ஆன்லைன் வலைத்தளங்களில் விற்பனை செய் போவதாகவும், அதனை வீட்டுக்கே டோர் டெலிவரியும் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிரா அரசாங்கம், இந்திய குடிமகன்களுக்கு ஒரு பெரும் இன்ப அதிர்ச்சி செய்தியை நேற்று அறிவித்துள்ளது. நாட்டில் நடக்கும் விபத்திகளில் பாதி, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் தான் நிகழ்கிறதென்று அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு சொல்கிறது.
இந்த அசம்பாவிதத்தைத் தடுக்கவும், தேவை இல்லாத உயிர் இழப்புகளைத் தவிர்க்கவும் மகாராஷ்டிரா அரசாங்கம் ஆன்லைன் இல் மதுபானங்களை விற்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த முடிவை மக்களின் நலன் கருதி எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரசேகர் பவான்குலே
மாநில மசோதாவின் அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே, நேற்று பத்திரிகையாளர்களிடம் மதுபான்களை ஆன்லைன் வலைத்தளங்களில் விற்பனை செய் போவதாகவும், அதனை வீட்டுக்கே டோர் டெலிவரியும் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

டோர் டெலிவரி
குடிபோதையினால் நாட்டில் நடக்கும் விபத்துகளை குறைப்பதற்கு, இனிமேல் வீட்டில் சரக்குகள் டோர் டெலிவரி செய்யப்படுமென்று அவர் தெரிவித்தார். இத்துடன் இந்திய வருவாயை அதிகரிப்பதற்கான இன்னொரு முக்கிய முயற்சியாகவும் இது இருக்குமென்று அவர் தெரிவித்துள்ளார்.

இ-காமர்ஸ் நிறுவனம்
இந்தியாவில் நிறுவப்பட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களில் சில நிறுவங்கள், இந்த ஆன்லைன் சரக்கு விற்பனையில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் கூடுதல் சிறப்பாக இ-காமர்ஸ் நிறுவனங்களே டோர் டெலிவரி சேவையும் இலவசமாகச் செய்யுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை மதுபான கடை
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக நெடுஞ்சாலைகள் அருகே அமைந்துள்ள 3,000 மதுபான கடைகள் மூடப்பட்டதினால், வரி விலக்குகளை இந்தியா இழந்து வருவதாகவும், அதைச் சமாளிக்க இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார்.

டீசல் மற்றும் பெட்ரோல் விலை குறைப்பு
மேலும், இந்த மாத ஆரம்பத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதினால், மாநிலத்தின் கருவூலத்தில் சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். வீட்டுக்கு உபயோக பொருட்கள் மற்றும் காய்கறிகளை ஆன்லைன் இல் வாங்குவது போல இனி மதுபானங்களை வாங்கிக்கொள்ளம் என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications