365 நாட்கள் வேலிடிட்டி உடன் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

பிஎஸ்என்எல் 4ஜி சேவை
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. பின்பு இந்நிறுவனம் அடுத்த ஆண்டு 5ஜி சேவையை அறிமுகம்செய்யும் என ஏற்கனவே தகவல் வெளிவந்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக வேலிடிட்டி மற்றும் அதிகசலுகைகளை வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இது ஒரு டேட்டா திட்டம் ஆகும். எனவே அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவற்றிற்கு வேறு ஒரு திட்டத்தில் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்.
இதுதவிர 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், 30 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் கன்டென்ட் போன்ற அசத்தலான சலுகைகளை வழங்குகிறது ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்களுக்கு ரிங்டோன், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட்டிற்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட்டிற்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்.

அஸ்வினி வைஷ்ணவ்
அதேபோல் சமீபத்தில் ஒடிசாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு (2024) முதல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று கூறினார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம்
மேலும் இதுதொடர்பாக அவர் கூறியது என்னவென்றால், பிஎஸ்என்எல் 5ஜி சேவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்றும், இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன என்றும் தெரிவித்தார். பின்பு இந்த ஆண்டு 4ஜி சேவையும் அடுத்த ஆண்டு 5ஜி சேவையும் வேகமாக வெளிவருவதை காண்போம் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே டிசிஎஸ் மற்றும் C-DOT ஆகிய இரு நிறுவனங்களுடன் இணைந்து 4ஜி திட்டத்தில் செய்ய வேலை செய்து வருகிறது. இத்திட்டத்தை அப்படியோ ஒரு வருடத்தில் 5G க்கு மேம்படுத்தப்படும் என அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








