புதிய UPI எச்சரிக்கை.. பணம் அதிகம் உள்ள பேங்க் அக்கவுண்ட் உடன் GPay, PhonePe லிங்க் பண்ணி இருக்கீங்களா?
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆன கோபால் விட்டல் (Gopal Vittal) தங்களுடைய பிரதான பேங்க் அக்கவுண்ட் (Primary Bank Account) உடன் தங்களுடைய யுபிஐ அக்கவுண்ட்டை (UPI Account) இணைத்து வைத்து இருப்பவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளார்.
அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகள் குறித்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கோபால் விட்டல் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இந்த கடிதம் வழியாக - போலி பார்சல் டெலிவரி அழைப்புகள், ஃபிஷிங் இணைப்புகள் மற்றும் டிஜிட்டல் கைது மோசடிகள் போன்ற அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதன் பயனர்களை பாதுகாப்பதில் ஏர்டெல்லின் உறுதிப்பாட்டை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தனது கடிதத்தில், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் சேஃப் செகண்ட் அக்கவுண்ட்டை (Airtel Payments Bank's Safe Second Account) அறிமுகம் செய்வதாக அறிவித்தார். இது வாடிக்கையாளர்களின் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை அவர்களின் முதன்மை வங்கி கணக்குகளிலிருந்து பிரித்து, டிஜிட்டல் வழியிலான கட்டணங்களை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான தீர்வாகும்.
இன்றைய டிஜிட்டல் கட்டண நிலப்பரப்பில், உங்கள் முதன்மை வங்கி கணக்கை யுபிஐ (UPI) அல்லது பேமண்ட் ஆப்களுடன் லிங்க் செய்வது உங்கள் அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால் ஏர்டெல்லின் சேஃப் செகண்ட் அக்கவுண்ட் ஆனது பாதுகாப்பாக இருக்க எளிய மற்றும் பாதுகாப்பான வழியை வழங்குகிறது என்று விட்டல் கூறியுள்ளார்.
இந்த பாதுகாப்பான "இரண்டாவது அக்கவுண்ட்" ஆனது முதன்மையாக பணம் செலுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், வட்டி சம்பாதிக்கும் அதே வேளையில் குறைந்தபட்ச பேலன்ஸ் மட்டுமே தேவைப்படுகிறது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கடன் வழங்காததால், வாடிக்கையாளர்கள் பெரிய தொகையை கணக்கில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் இந்த அக்கவுண்ட்டை மிகவும் விரைவாக திறக்கலாம் மற்றும் வசதியாக பயன்படுத்தலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பேமண்ட் பேங்க் டேப்பிற்கு சென்று, ஆதார் மற்றும் பான் அடிப்படையிலான கேஒய்சி செயல்முறையை செய்து, ஒரு எம்பின் (mPIN) அமைத்து, பாதுகாப்பாக பணப்பரிவர்த்தனை செய்ய, அந்த அக்கவுண்ட்டில் தேவையான பணத்தை நிரப்பவும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் முதன்மை வங்கியிலிருந்து பணத்தை மாற்றுவதன் மூலமோ அல்லது எந்த ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சில்லறை விற்பனை மையத்தில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலமோ பாதுகாப்பான இரண்டாவது கணக்கீழ் பணத்தை நிரப்பலாம். இந்த சலுகை மில்லியன் கணக்கானவர்கள் தடையற்ற டிஜிட்டல் கொடுப்பனவுகளை அனுபவிக்கும், அதே வேளையில் அங்கீகரிக்கப்படாத அணுகல் மற்றும் மோசடியிலிருந்து அவர்களுடைய நிதியை பாதுகாக்கவும் உதவுகிறது.
எங்கள் வாடிக்கையாளர்கள் இன்று ஒரு பாதுகாப்பான இரண்டாவது கணக்கை திறந்து தங்கள் பணத்தை பாதுகாக்க சில நிமிடங்கள் ஒதுக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்றும் விட்டல் கூறியுள்ளார். பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் பயன்படுத்த எளிதான நிதி சேவைகளுடன் உங்களை மேம்படுத்த ஏர்டெல் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் எங்கள் (ஏர்டெல்) நெட்வொர்க்கில் ஏதேனும் குற்றம் அல்லது மோசடி நடந்தால் அது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது. உங்கள் பாதுகாப்பு எப்போதும் எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமையாக இருக்கும் என்றும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆன கோபால் விட்டல் கூறி உள்ளார்.
மேலும் மேம்பட்ட ஏஐ (AI) உடன், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கான உடனடி எச்சரிக்கைகளைசெய்வதில் நாங்கள் முன்னோடியாக இருக்கிறோம். மேலும் தவறுதலாக கிளிக் செய்தாலும் மோசடி இணைப்புகளை தடுக்க்க தொடங்கினோம் என்பதையும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications








