மார்ச் 15 புதிய ஐபோன் : புதிய அம்சங்கள் இதோ.!!
இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் மார்ச் 15 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் கட்டாயம் புதிய கருவியினை வெளியிடும் என்றே தெரிவிக்கின்றன. அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் 5SE என்ற பெயரில் புதிய கருவியை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த கருவியில் வழங்கப்படுவதாக கூறப்படும் சில சிறப்பம்சங்களை தொடர்ந்து பாருங்கள்.

மெட்டல் வடிவமைப்பு
வெளியாக இருக்கும் ஐபோன் 5SE கருவியானது முற்றிலும் மெட்டல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் ஐபோன் 5எஸ் கருவியை விட மெலிதாகவும் ஐபோன் 6எஸ் சார்ந்த வடிவமைப்பு இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

நிறங்கள்
ஆப்பிள் 5SE கருவியானது ஐபோன் 6எஸ் போன்றே ரோஸ் கோல்டு நிறத்தில் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

கைரேகை ஸ்கேனர்
ஐபோன் 5SE கருவியில் ஹோம் பட்டனுடன் இன்டிகிரேட் செய்யப்பட்ட டச் ஐடி கைரேகை ஸ்கேனர் மற்றும் என்எப்சி அம்சம் மற்றும் ஆப்பிள் பே அம்சமும் வழங்கப்படலாம்.

திரை
புதிய ஐபோன் கருவியானது 4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் பெரும்பாலும் இந்த முறை 3டி டச் சப்போர்ட் வழங்கப்பட மாட்டாது என்றே கூறப்படுகின்றது.

கேமரா
வெளியாக இருக்கும் ஐபோன் 5SE கருவியில் ஐபோன் 5எஸ் கருவியில் வழங்கப்பட்டதை போன்றே 8 எம்பி ப்ரைமரி கேமராவும், 1.2 எம்பி செல்பீ கேமராவும் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

பிராசஸர்
சிபியு பொருத்த வரை ஐபோன் 5SE கருவியில் புதிய ஏ9 பிராசஸர் மற்றும் அதிக ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications