அடுத்த தலைமுறைக்கான புதிய மானிட்டர்கள்

By Karthikeyan
|
அடுத்த தலைமுறைக்கான புதிய மானிட்டர்கள்

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இன்று ஒரு புதிய க்ளவ்டு மானிட்டரைக் களமிறக்கி இருக்கிறது. இந்த மானிட்டர் அடுத்த தலைமுறைக்கான டெராடிசி டெரா2 சிப்செட் மற்றும் வி சீரிஸ் சீரோ க்ளயன்ட் க்ளவ்டு தொழில் நுட்பத்துடன் வருகிறது. இந்த மானிட்டருக்கு சிஎவி42 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

க்ளவ்டு மானிட்டர்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய க்ளவ்டு மானிட்டரைக் களமிறக்கி இருப்பதாக எல்ஜியின் துணை இயக்குனர் ஜே.ஜே. லீ கூறியிருக்கிறார்.

இந்த மானிட்டர் மிகவும் துல்லியமாகவும் அதே நேரத்தில் மிகவும் தெளிவாகவும் இருக்கும். எல்ஜியின் இந்த புதிய க்ளவ்டு மானிட்டர்கள் 23 இன்ச் மற்றும் 19 இன்ச் ஆகிய மாடல்களில் வருகின்றன. இதில் உள்ள டெரா2 சிப்செட் குறைந்த மின்சாரத்தையே உறிஞ்சும்.

மேலும் இந்த மானிட்டரில் சிறந்த மல்டி மீடியா அனுபவத்தைப் பெறலாம். அதோடு டெரா2 சிப்செட் டிடிஆர்2 ரேமையும் சப்போர்ட் செய்வதால் இந்த மானிட்டர் மிக விரைவாக செயலாற்றும் தன்மை கொண்டுள்ளது.

இந்த மானிட்டர் 6 யுஎஸ்பி போர்ட்டுகளைக் கொண்டுள்ளது. அதனால் இந்த மானிட்டரில் கீபோர்டு, மவுஸ், பிரிண்டர், ஸ்கேனர், கார்டு ரீடர்கள் மற்றும் கேமராக்களை இணைத்துக் கொள்ளலாம். அதோடு இதில் யுஎஸ்பி இன்டர்பேஸ் பாகஸ் உள்ளதால் யுஎஸ்பி வசதி கொண்ட சாதனங்களையும் இந்த மானிட்டரில் இணைத்துக் கொள்ளலாம்.

இந்த எல்ஜி மானிட்டர்களுக்கு நிறைய ஹார்ட்வேர்கள் தேவைப்படாது. மிகவும் ஸ்டைலாக வரும் இந்த மானிட்டரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X