இந்தியாவில் லாப்டாப் தயாரிக்கும் லெனோவோ
இந்தியாவில் லாப்டாப் கருவிகளை தயாரிக்க இருப்பதாக லெனோவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் படி ஏற்கனவே டெஸ்க்டாப் கணினிகளைத் தயாரிக்கப்பட்டு வரும் புதுச்சேரியில் இருக்கும் தயாரிப்பு ஆலையில் லாப்டாப் மற்றும் நோட்புக் கருவிகளைத் தயாரிக்கும் வசதிகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அமைந்திருக்கும் ஆலையில் ஏற்கனவே தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்டிருக்கின்றது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இப்பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கணினி விற்பனையில் முன்னணியில் இருக்கும் லெனோவோ நிறுவனம் தனது கருவிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவில் இருந்து கருவிகளை இறக்குமதி செய்வதை விட இந்தியாவில் கருவிகளை தயாரிப்பது எளிமையான காரியம் என லெனோவோ இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மொத்த வருமானத்தைப் பொருத்த வரை ஒட்டு மொத்த கணினி விற்பனையில் 85 முதல் 88 சதவீதம் வரை லெனோவோ கருவிகளே இருக்கின்றது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications