எல்இடி டிவியில் நுழைந்த ஹேக்கர் அட்டகாசம்.!
ஸ்மார்ட் டிவியில் உள்ள வெப் கேமரா அணைத்து வைக்கப்படதால், மனைவியின் அந்தரங்க புகைப்படங்கள் லீக் ஆகின. வாட்ஸ் ஆப்பில் மனைவியின் காட்சிகளை கண்ட கணவர் அதிர்ச்சியடைந்தார். எவ்வாறு ஹேக்கர்கள் எல்இடியில் நுழைந்தனர் என்று இந்த சம்பவம் விவரிக்கின்றது. அதுவும் கேரளாவில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள வாலிபர்-மனைவி
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் திருமணமாகி வாலிபர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் மனைவி ஆசைப்பட்டு கேட்டதால், பிரியத்தோடு எல்இடி டிவி பரிசளித்துள்ளார். கணவர். மேலும், அதில், ஸ்கைப் போன்ற வசதிகள் இருப்பதால், வெப் கேமராவும் வாங்கப்பட்டது.

எல்இடி டிவிகளின் வசதிகள்
தற்போது, பல்வேறு நிறுவனங்களும் எல்இடி டிவிகளை விற்பனை செய்து வருகின்றன. இதில், ஸ்கைப், இண்டர்நெட், யூடியூப், இணையதள வசதிகள், வெப் கேம், கூகுள், அசிஸ்டண்ட் வாஸ்கால்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்த முடியும். இதனால் நாம் வெளியூர் சென்றாலும் வீட்டில் வெப்கேம் இருப்பதால், வீட்டினருடன் நாம் எளிதாக வீடியோ காலிங் முறையில் பேசிக்கொள்ள முடியும்.

கணவன்-மனைவி வீடியோ கால் பேச்சு
இந்நிலையில் கணவன் மனைவியும் அடிக்கடி ஸ்கைப் காலிங் மூலம் பேசிக் கொள்வது வழக்கம். கணவர் தனது லேப்டாப்பை பயன்படுத்தி பேசி வந்துள்ளார். வெப் கேமராவும் வீட்டில் அனைத்து வைக்காமல் இருந்துள்ளார் அவரது மனைவி.

வாட்ஸ் ஆப் கணவருக்கு சென்றது
இந்நிலையில் கணவரின் செல்போனில் உள்ள வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மனையின் அந்தரங்க காட்சிகள் வீடியோ மற்றும் புகைப்படமாக சென்றுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து தனது மனையிடம் தெரிவித்துள்ளார். வீட்டிற்கு யாரவது வெளியாட்கள் வந்தார்களா, இல்லை கேமரா எதாவது வைக்கப்பட்டுள்ளதா என்றும் தேடி ஆனால் எவுதும் கிடைக்கவில்லை.

போலீசில் புகார்
இதுகுறித்து வாலிபர் வெளிநாட்டில் இருந்தபடியே போலீசில் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக வந்து பல்வேறு கோணங்களில் விசாரணையை துவங்கினர். பிறகு, யாரும் வீட்டிற்கு வெளிநபர்கள் வந்து செல்லவில்லை, ரகசிய கேமராவும் சிக்கவில்ல என்றும் தெரியவந்தது. இதையடுத்து வீடியோ எடுக்கப்பட்ட கோணத்தை வைத்து போலீசார் விசாரணையை துவங்கினர்.

ஸ்மார்ட் டிவி வெப் கேம்
அப்போது, ஸ்மார்ட் டிவியின் வெப்கேமரா மூலம் அந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை சூடுபடுத்தினர். தனது வெப் கேமராவை மனைவி அனைத்து வைக்காமல் இருந்துள்ளார். மேலும், கணவர் பயன்படுத்தி வந்த லேப்டாப்பில் மூலம் ஹேக்கர்கள் எல்இடி டிவிக்கு ஊடுருவியது தெரியவந்தது.

உடைமாற்றும் காட்சிகள்
வெப்கேமராவை அவரின் மனைவி அனைத்து வைக்காமல் இருந்துள்ளார். மேலும் டிவியில் 24 மணி நேரமும் இணைய சேவையும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் கேமராவையும், இண்டர்நெட்டையும் தேவையில்லாத நேரங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

கட்டாயம் தவிர்க்க வேண்டும்
எல்இடி டிவிகளில் நாம் தேவையில்லாத நேரங்களில் நாம் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றோம். மேலும், 24 மணி நேரமும் வெப்கேமராவும் ஆன் செய்யப்படிருக்கும்.
இந்த டிவிகள் ஆண்ட்ராய்டு வடிவமைப்பு உடையதால், ஹேர்கள், ஆபாச வலைதளம் உள்ளிட்ட பல்வேறு வலைதளங்கள் வாயிலாகவும் நுழைய வாய்ப்புள்ளது. இதனால் இவைகளை நாம் தேவையில்லா நேரங்களில் கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறைந்தது வெப்கேமராவையும், இணையத்தையாவது கட்டாயம் தவிர்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications