Home
News

Google-ஐ தூக்கி எறிஞ்சிட்டு 1.8 கோடி சம்பளத்தில் வேற கம்பெனிக்கு போன மாணவர்!

அமேசான், கூகுள், ஃபேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்களில் பணி நியமண ஆணையை பெற்று அசத்தியுள்ளார் கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் பிசாக் மொண்டல்.

 பிசாக் மொண்டல்

பிசாக் மொண்டல்

ஆனால் அமேசான், கூகுளை விட பேஸ்புக் நிறுவனம் அதிக ஊதியம் தர முன்வந்ததால் அங்கு பணியில் சேர முடிவு செய்துள்ளார்அந்த மாணவர்.அதாவது கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் நான்காம் படித்துஆண்டு கொண்டிருக்கும் மாணவர்தான் பிசாக் மொண்டல்.

இன்னும் ஒரு செமஸ்டர் இருக்கு.!

இன்னும் ஒரு செமஸ்டர் இருக்கு.!

குறிப்பாக கல்லூரிப் படிப்பை முடிக்கவே இன்னும் ஒரு செமஸ்டர் மீதமிருக்கும் நிலையில் மாணவர் மொண்டலுக்கு பேஸ்புக் நிறுவனம் 1.8 கோடி ஊதியம் தர முன்வந்துள்ளது. மேலும் வரும் செப்டம்பர் மாதம் லண்டனுக்கு சென்று பேஸ்புக் நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்
மொண்டல்.

இவ்வளவு பெரிய வேலை எப்படி கிடைத்தது?

இவ்வளவு பெரிய வேலை எப்படி கிடைத்தது?

அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, பல நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்தேன். பின்பு என்னுடைய பாடத்திட்ட ஆய்வுகளுக்கு இன்டர்ன்ஷிப் மிகவும் உதவியாக இருந்தது. மேலும் இதுவே நேர்முகத் தேர்வில் வெற்றிபெற எனக்குஉதவியது என்று கூறினார் மொண்டல்.

அதிக சம்பள பேக்கேஜ்

அதிக சம்பள பேக்கேஜ்

அதேபோல் கூகுள், பேஸ்புக், அமேசான் நிறுவனங்களில் முழு நேர வேலைக்கான பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளேன். ஆனால் அமேசான், கூகுள் நிறுவனங்களை விட பேஸ்புக் நிறுவனம் அதிக சம்பள பேக்கேஜ் வழங்கியதன் காரணமாக, அதை தேர்வு செய்துள்ளேன்என்று கூறினார்அந்த மாணவர்.

 சமிதா பட்டாச்சார்யா

தொற்றுநோய்க்கு பிறகு மாணவர்கள் இவ்வளவு பெரிய நிறுவனங்களில் வேலை பெறுவது இதுவே முதல் முறை என ஜாதவ்பூர் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு அதிகாரி சமிதா பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

சாதாரண  குடும்பத்தில் இருந்து வந்தவர்

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்

மாணவர் பிசாக் மொண்டல் வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். அங்கன்வாடி ஊழியரான மொண்டலின் தாயார்,இது எங்களுக்கு பெருமையான விஷயம் என்று கூறியுள்ளார். அதேபோல் சிறு வயது முதல் படிப்பில் அதிக ஆர்வம் காட்டினார் மொண்டல்.

ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள்

ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள்

கடந்த ஆண்டு ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் ஒரு கோடி சம்பளத்திற்கு வேலைவாய்ப்பை பெற்ற நிலையில், தற்போது மொண்டல் அவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி 1.8 கோடி சம்பளத்திற்கு பேஸ்புக்கில் நியமனம் செய்து செம்மையான சம்பவம் செய்துள்ளார். மேலும் மாணவர் மொண்டலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Kolkata Student received an appointment order from Facebook for salary of Rs 1.8 crore :Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X