டிஜிட்டல் இந்தியா - கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்..!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் டிஜிட்டல் லாக்கர், ஈ-எஜிகேஷன், ஈ-ஹெல்த் உள்ளிட்ட சுமார் 1 லட்சம் கோடி மதிப்பிலான சேவைகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்ட வரப்பட இருக்கின்றது.
இந்த ஹெல்மெட்டை எவன்டா கண்டுப்பிடிச்சான்..?!
அவ்வாறு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கும் சில திட்டங்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்..
திருட்டுத்தனமாக வெளியான ஐபோன் 6எஸ் புகைப்படங்கள்

டிஜிட்டல் லாக்கர்
இத்திட்டத்தின் மூலம் அரசு ஆவனங்களை டிஜிட்டல் முறையில் இணையத்தில் வைத்து கொள்ள முடியும்.

மை.கவ்.இன்
இந்த தளத்தில் அரசு சார்ந்த அனைத்து விஷயங்களிலும் பங்கேற்க முடியும் என்பதோடு கருத்துக்களையும் பதிவு செய்ய முடியும்.

ஈ-சைன்
இதன் மூலம் அரசு ஆவணங்ககளில் ஆதார் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் கையெழுத்திடுவதாகும்.

ஈ-ஹாஸ்பிட்டல்
மருத்துவம் சாந்த முன்பதிவு, பணம் செலுத்துவது உள்ளிட்ட பல சேவைகளை ஆன்லைன் மூலம் மேற்கொள்ள இந்த திட்டம் உதவியாக இருக்கின்றது.

நேஷ்னல் ஸ்காலர்ஷிப் போர்டல்
கல்வி உதவித்தொகை சார்ந்த பணிகளை மேற்கொள்ள இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல்
இந்தியாவில் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி மக்களுக்கு துரிதமான சேவையை வழங்குதல்.

பாரத் நெட் ப்ரோகிராம்
ஆப்டிக்கல் ஃபைபர் பயன்படுத்தி இந்தியாவில் இருக்கும் சுமார் 250,000 கிராம பஞ்சாயத்துகளை ப்ராட்பேன்டு மூலம் இணைக்கும் திட்டம்.

நெட்வர்க்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை நெட்வர்க் மூலம் பழைய தொலைபேசி இணைப்புகளை புதிப்பித்தல்.

வை-பை
இந்தியா முழுவதிலும் அதிகளவிலான வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவும் திட்டம்.

ப்ராட்பேன்டு ஹைவேஸ்
இந்த திட்டத்தின் மூலம் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மக்களுக்கு சேவைகளை வழங்குவது.


Click it and Unblock the Notifications