Just In
- 6 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 6 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 7 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 8 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கீழடி: 2000 ஆண்டுக்கு முன்னர் கட்டுமானத்திற்காக பயன்படுத்திய வட்ட வடிவ துளைகள் கண்டுபிடிப்பு!
கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் முழுவீச்சில் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வு பணியில் கட்டுமானத்திற்குப் பயன்படுத்திய வட்ட வடிவ துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வட்ட வடிவ துளைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்று பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் 6ம் கட்ட அகழாய்வு பணி நடந்துவருகிறது. இந்த 6ம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்.19ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இடையில் ஊரடங்கின் போது அகழாய்வு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கீழடியின் 6ம் கட்ட அகழாய்வு பனியின் போது பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக, நீள வடிவ பச்சை நிறப் பாசிகள், விலங்கின் எலும்பு படிமம், மனித எலும்புக்கூடுகள், குழந்தைகளின் எலும்புக் கூடுகள், மண் பானைகள், முதுமக்கள் தாழிகள், சிறிய உலைகலன், ஓடுகள், எடைக் கற்கள் எனப் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கீழடி பகுதியில் வளைவான செங்கல் கட்டுமான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் அருகிலேயே 6 அடி ஆழத்தில் வளைவான அமைப்பில் இருக்கக்கூடிய 6 சிறிய வட்ட வடிவ துளைகள் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் பெரும்பாலும் வட்ட வடிவ வசிப்பிடத்தில் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
2,000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் மூங்கில் கழிகள், மரக்குச்சிகளை வட்ட வடிவில் நட்டு அதன் மேல், கூரை எழுப்பி அதில் குடியிருந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரமாக 5ம் கட்ட அகழாய்வு பனியின் போது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கூரை அமைப்பைக் கண்டறிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழடியின் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் செப்டம்பரில் முடிவடையும் என்பதால், தற்பொழுது கீழடியில் அகழாய்வு பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளது. 6-ம் கட்ட அகழாய்வின் போது கீழடியில் மொத்தமாக 12 குழிகள் தோண்டப்பட்டது, தற்பொழுது இன்னும் கூடுதலாகக் குழிகளில் தோண்டப்படுவதற்கான நில அளவுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது என்று தொடர்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470