Just In
- 9 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 9 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 10 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 11 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கொந்தகையில் கண்டுபிடிக்கப்பட்ட 51/2 அடி முழு உருவ மனித எலும்புக்கூடு! அவிழும் மர்மம்!
கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் முழுவீச்சில் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வு பணியில் சமீபத்தில் 5 அடுக்கு உரை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது 6-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நான்கு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொந்தகையில் நேற்று மாலை 51/2அடி அளவில் உள்ள முழு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் 6ம் கட்ட அகழாய்வு பணி நடந்துவருகிறது. இந்த 6ம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்.19ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இடையில் ஊரடங்கின் போது அகழாய்வு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கீழடியின் 6ம் கட்ட அகழாய்வு பனியின் போது பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக, நீள வடிவ பச்சை நிறப் பாசிகள், விலங்கின் எலும்பு படிமம், குழந்தைகளின் எலும்புக் கூடுகள், மண் பானைகள், முதுமக்கள் தாழிகள், சிறிய உலைகலன், ஓடுகள், உரை கிணறு, எடைக் கற்கள் எனப் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, தற்பொழுது முதல் முறையாக முழு உருவ மனித எலும்பு கூடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாத துவக்கத்தில் 7ம் தேதி அன்று ஒரு எலும்புக்கூடும், அதனைத் தொடர்ந்து 13ம் தேதி அன்று மற்றொரு குழந்தையின் எலும்புக்கூடும் கண்டுபிடிக்கப்பட்டது.அதேபோல், கடந்த மாதம் ஜீன் 19ம் தேதியும் ஒரு எலும்புக் கூடும் கண்டெடுக்கப்பட்டது.
இதுவரை ஒட்டுமொத்தமாக 5 முழு உருவக் குழந்தையின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் முறையாக 51/2அடி அளவில் முழு உருவ எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இதை ஆராய்ச்சி செய்து இன்னும் கூடுதல் தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6ம் கட்ட அகழ்வாய்வில் பல மர்ம முடிச்சுகள் வேகமாக அவிழ்க்கப்பட்டு வருகிறது.
நேற்று அகழாய்வில் அதிரடி திருப்பமாக கொந்தகையில் இந்த முழு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சிதிலம் அடையாமல் அப்படியே இருக்கிறது, முழு மனித உடல் எலும்புக்கூடு அப்படியே கிடைப்பது இதுதான் முதல்முறையாகும். அடுத்தகட்டமாக கார்பன் ஆராய்ச்சி செய்யப்படவுள்ளது, இதன் மூலம் படிமத்தின் வயது மற்றும் காலத்தைக் கணக்கிட முடியும் என்று மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.
இந்த முழு உருவ எலும்பு கூடுகளை தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்து கண்டெடுத்துள்ளனர். மேலும் கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கிடைக்கப் பெற்று வருகிறது. அங்குள்ள மற்றொரு குழியிலிருந்து தொடர்ச்சியாகக் குழந்தைகளின் எலும்புகள் கிடைக்கப்பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படிமங்கள் சோதனை செய்யப்பட்டு இவை எந்த ஆண்டில் வாழ்ந்தவை என்ற விவரம் தெரியவரும்.
தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும்சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கக் கூடும் என்று தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கீழடியின் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் வரும் செப்டம்பர் மாத இறுதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தற்பொழுது பணிகள் இன்னும் வேகமாக முழு தீவிரத்துடன் நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470