2022 டிசம்பர் வரை Work From Home: ஐடி நிறுவனங்களுக்கு அறிவுறுத்திய அரசு- காரணம் கொரோனா இல்ல வேற!
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்றுதான் கூறவேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கொரோனா பாதிப்பு பல நாட்கள் சுமார் 4 லட்சத்தை தாண்டியது. ஆனால் ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் கொரோனா தொற்றின்
2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

குறிப்பாக கொரோனா பாதிப்பின் காரணமாக சிலர் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர், பின்பு மாணவர்களுக்கும்ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போது கொரோனா 2-வது அலை பரவல் வேகமாக குறைந்து வருவதால், மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணி புரியும் நடைமுறையை மெல்ல மெல்ல பல்வேறு நிறுவனங்களும் தொடங்கி வருகின்றன.

இந்நிலையில் கர்நாடகாவில் அடுத்த ஆண்டு டிசம்பர் வரை வீட்டில் இருந்தே பணி புரியும் வசதியை ஊழியர்களுக்கு ஐடி நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த மாநில அரசு விடுத்துள்ளது.

அதாவது கர்நாடக மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கூடுதல் முதன் செயலாளர் ரமணா ரெட்டி அவர்கள் பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது என்னவென்றால், பெங்களூருவில் இருக்கும் கிருஷ்ணராஜபுரம் சில்க் போர்ட் சாலையில் அடுத்த ஓராண்டுக்கு மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள்நடைபெற உள்ளது.

எனவே இதனால் 19 கிமீ நீளமுள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்தபகுதியில் தான் ஐடி நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன.

இந்த ஐடி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வரும் 2022-ம் ஆண்டு டிசம்பர் வரை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிவுறுத்தலை ஏற்றுக்கொள்வதாக 50 சதவீத நிறுவனங்கள் அரசுக்கு பதில் அனுப்பியுள்ளன என்று தெரிவித்தார் ரமணா ரெட்டி.


Click it and Unblock the Notifications