பென்க் வழங்கும் ஐபோனுக்கான புதிய புரொஜக்டர்!

எல்லாவிதமான தகவல்களையும் தெளிவாக பார்க்க பெறும் அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது புரொஜக்டர். ஜாய்பீ ஜிபி-2 என்ற புதிய புரொஜக்டரை அறிமுகம் செய்துள்ளது.
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஐபோன், ஐபோட் போன்றவற்றை பயன்படுத்தும் சவுகரியங்களும் இதில் இருக்கிறது. இதில் டச் சென்ஸிடிவ் கன்ட்ரோல் பேனல் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 2-டபிள்யூ ஸ்பீக்கர்ஸ் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
புரொஜக்டர்களை கையாள்வது கொஞ்சம் கடினமான விஷயம் என்பதை மனதில் கொண்டு பென்க் நிறுவனம் இந்த ஜாய்பீ ஜிபி-2 புரொஜக்டரை உருவாக்கி உள்ளது. 565 கிராம் எடை கொண்டதால் இதை எளிதாக வடிவமைக்கலாம்.
இந்த புதிய புரொஜக்டர் கூடிய விரைவில் இந்தியாவிலும் வெளியாக உள்ளது என்றும் பென்க் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியின் மதிப்பு ரூ.5,000 விலை கொண்டதாக இருக்கும்.
ஒரு மீட்டர் தூரத்திலும் 44-இஞ்ச் அளவில் தகவல்களையும், புகைப்படத்தினையும் இதில் புரொஜக்ட் செய்து பார்க்க முடியும். இதற்கும் முன்பு ஜாய்பீ ஜிபி-1 என்ற புரொஜக்டரை வெளியிட்டு வெற்றியும் கண்ட பென்க் நிறுவனம் இப்போது ஜாய்பீ ஜிபி-2 என்ற புதிய புரொஜக்டரை உருவாக்கி உள்ளது.
ஐபோன் மற்றும் ஐபேட் மின்னணு சாதனங்களையும் இதில் பொருத்தும் வசதியுடன் உருவாக்கப்பட்ட இந்த புரொஜக்டர் ரூ.39,167 விலையில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications