முதன்மை சிம்மாக மாறிய ஜியோ- 92% பிடித்து சாதனை.!
ஜியோ நிறுவனம் இந்திய தொலைபேசி சந்தயில் நுழைந்து குறுகிய ஆண்டுகளே ஆகின்றது. ஆனாலும், குறைந்த காலத்தில் அதிக அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்தியாவில் முதன்மை நெட்வொர்மாகவும் மாறியுள்ளது. இந்ந
ஜியோ நிறுவனம் இந்திய தொலைபேசி சந்தயில் நுழைந்து குறுகிய ஆண்டுகளே ஆகின்றது.
ஆனாலும், குறைந்த காலத்தில் அதிக அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்தியாவில் முதன்மை நெட்வொர்மாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் ஜியோவை வாய்ஸ் கால்களுக்கு முதன்மை சிம்மாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜியோ நுழைவு:
ஜியோ நிறுவனம் பல்வேறு அதிரடி திட்டங்கள் மூலம் இந்திய சந்தைக்குள் நுழைந்து பல்வேறு வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.
குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்ற நிறுவனமாகவும் இருந்துள்ளது. வோல்டு இ ரோமிங் சேவை, கால் டிராப் பிரச்னை இல்லை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் பெற்றுள்ளது. இதை டிராயும் அறிவித்துள்ளது.

முதன்மை சிம்மாக மாறிய ஜியோ:
மேலும் ஜியோ நிறுவனம் முதன்மை சிம்மாகவும் மாறியுள்ளது.
டூயல் சிம்கார்டு வசதியுடன் கூடிய போன்களில் ஜியோ சிம்கார்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது கடந்த 2018ம் ஆண்டறிக்கையின் படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

92 % பேர் பயன்படுத்துகின்றனர்:
சியோ சிம்கார்ட்டை கொண்டு வாய்ஸ் கால் அழைப்புகளுக்கு முதன்மையாக சிம் கார்ட்டில் ஜியோவை 92 சதவீதம்பேர் கடந்த 2018-2019 ஜனவரியில் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், கடந்த 2018 மார்ச்-ஏப்ரலில் மட்டும் சுமார் 83 % சதவீதம் முதன்மை சிம்கார்ட்டாக ஜியோவை பயன்படுத்தியுள்ளனர்.

டேட்டாவில் ஏர்டெல்:
இதுகுறித்து இந்தியாவில் உள்ள 13 முதன்மையான நகரங்களில் எடுக்கப்பட்டுள்ளது ஆய்வில் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், ஏர்டெல்லை டேட்டா உபயோகத்திற்காக மட்டும் 95 சதவீதம் முதன்மையாக பயன்படுத்தி வருகின்றனர். இது டிசம்பர் முதல் ஜனவரி வரை நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏர்டெல்லை டேட்டாவுக்காக கடந்த 2018 மார்ச்- ஏப்ரலில் 83 தசவீதம் பேர் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

ஆய்வு நடத்தப்பட்ட நகரங்கள்:
நியூடெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா, நாக்பூர், பாட்னா, விசாகபட்டிணம், ஜோத்பூர், உதய்பூர், ஆல்வார், சேலம், ராய்பூர், அலகாபாத்.

ஜியோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை:
ஜியோ சிம்கார்ட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 11 % சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 2018 மார்ச்-ஏப்ரலில் 17 % உயர்ந்துள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரவிக்கின்றன.


Click it and Unblock the Notifications