Home
News

நீங்கள் ஜியோ வாடிக்கையாளரா.! இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.!

ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ரீசார்ஜ் திட்டம் மூலம் 1.5ஜிபி டேட்டா 84நாட்களுக்கு கிடைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இலவச கால் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சலுகைகளும் கிடைக்கும்

ஜியோ நிறுவனம் கடந்த ஒரு மாதம் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கவில்லை, இந்நிலையில் நேற்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம். இந்த அறிவிப்பு பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில்
இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

நீங்கள் ஜியோ வாடிக்கையாளரா.! இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.!

அதன்படி ரூ.399-ரீசார்ஜ்க்கு முழுமையான கேஷ்பேக் வழங்கியுள்ளது ஜியோ நிறுவனம். மேலும் ஜியோ நியூ இயர் ஆஃபர் என்ற பெயரில் இந்த அட்டகாசமான சலுகையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

சலுகை

சலுகை

மேலும் பழைய வாடிக்கையாளர்கள் அல்லது புதிதாக ஜியோ சேவையை பெறுவர்கள் யார் வேண்டுமானலும் இந்த அட்டகாசமான சலுகையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 100சதவீதம் கேஷ்பேக்

100சதவீதம் கேஷ்பேக்

குறிப்பாக ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 100சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும், அதாவது ரூ.399-மதிப்புள்ள கூப்பன் மை ஜியோ மொபைல் அப்ளிகேஷனில் சேர்க்கப்படும், பின்பு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆன்லைன் ஷாப்பிங்
செய்யும்போது அதைப் பயன்படுத்தினால் 399 ரூபாயக்கு சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூப்பன்

கூப்பன்

நேற்று(டிசம்பர் 28) முதல் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையைப் பெற முடியும். இருந்தபோதிலும் கிடைக்கு 399 ரூபாய் மதிப்புள்ள கூப்பனை 2019-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதிக்குள் பயன்படுத்திவிட
வேண்டும். அதற்கு பின் அந்த கூப்பன் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.

 1.5ஜிபி டேட்டா

1.5ஜிபி டேட்டா

ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ரீசார்ஜ் திட்டம் மூலம் 1.5ஜிபி டேட்டா 84நாட்களுக்கு கிடைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இலவச கால் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சலுகைகளும் கிடைக்கும் என
ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

நெட்வொர்க் இல்லாமல் வாய்ஸ் கால்- சோதனை துவங்கியது ஜியோ.!

நெட்வொர்க் இல்லாமல் வாய்ஸ் கால்- சோதனை துவங்கியது ஜியோ.!

இந்திய சந்தையில் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்ற நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இருக்கின்றது.

இந்த நிறுவனம் தற்போது, 4ஜியில் சேவை அளித்து வருகின்றது. வாடிக்கையாளர்களை கவர பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி வருகின்றது. மேலும் பல்வேறு அதிரடி சலுகைகளையும் அறிவித்துள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நெட்வொர்க் இல்லாமல் வாய்ஸ் கால் சோதனை சோதனை துவங்கியுள்ளது. விரைவில் இந்த சேவை பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை வெற்றுள்ளது ஜியோ நிறுவனம். இந்தியாவில் முன்னணி நெட்வொர்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தற்போது இரண்டாவது ஆண்டிலும் அடியெடுத்து வைத்துள்ளது.

சலுகைகள்:

சலுகைகள்:

ஜியோ நிறுவனம் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், ரோமிங் ப்ரீ, ப்ரீ காலர் டியூன், மிஸ்டு கால் அலர்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகின்றது.

கால் டிராப் ஆகாத ஜியோ:

கால் டிராப் ஆகாத ஜியோ:

டிராய் (இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) அண்மையில், சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்தின் போது, பிஎஸ்என்எல், ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் கால் டிராப் பிரச்னையில் சிக்கியுள்ளன. ஆனால் ஜியோ நிறுவனம் மட்டும் கால் டிராப் பிரச்னையில் சிக்கவில்லை என்றும் சிறந்த முறையில் பொது மக்களுக்கு சேவை வழங்குகின்றது என்று டிராய் அமைப்பு அறிவித்தது.

வேல்டு இ ரோமிங் சேவை:

வேல்டு இ ரோமிங் சேவை:

இந்தியாவில் ஜியோ நிறுவனம் முதல்முறையாக வேல்டு இ ரோமிங் சேவை எனப்படும் அதிகவேக இணைய சேவையையும் வழங்கியது. மற்ற நிறுவனங்களை காட்டிலும், ஜியோவில் அதிவேக இணையத்தை பயன்டுத்த முடியும். இதில் முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனம் என்ற பெருமையை கொண்டுள்ளது.

5 ஜி சேவை:

5 ஜி சேவை:

இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக உரிமமும் ஏற்கனவே வெற்றுவிட்டது. இதற்கான ஆயத்த பணிகளிலும் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

வாய்ஸ் ஓவர் வைபை:

வாய்ஸ் ஓவர் வைபை:

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ வோ வைபை (வாய்ஸ் ஓவர் வைபை) எனும் சேவையை சோதனை செய்கிறது. புதிய வைபை சேவை அடுத்த சில மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

ஜியோ சோதனை:

ஜியோ சோதனை:

ரிலையன்ஸ் ஜியோ வோ வைபை சேவையை சோதனை செய்வதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், மீண்டும் சோதனை துவங்கியிருப்பதால் இதன் வெளியீடு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கலாம். ஜியோவின் வோ வைபை சேவை மத்திய பிரதேச மாநிலத்தில் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும் ரிலையன்ஸ் ஜியோ தனது வோ வைபை சேவையை சோதனை செய்வதாக கூறப்படுகிறது. ஜியோ வைபை சேவையை பயன்படுத்தும் ஸ்கிரீன்ஷாட் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஜியோ வைபை சேவை தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் ஜியோ விரைவில் வோ வைபை சேவையை வெளியிடலாம்.

2019ல் சேவை துவக்கம்:

2019ல் சேவை துவக்கம்:

2019 ஆம் ஆண்டு வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ தனது வோ வைபை சேவையை வணிக ரீதியில் வெளியிட திட்டமிட்டிருக்கலாம். முதற்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்குகளில் மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டு அதன் பின் மற்ற நெட்வொர்க்குகளிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio’s Happy New Year Offer on Rs 399 recharge: 5 things to know: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X