30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!
ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது,குறிப்பாக இந்நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் மக்களிடம் அதிக வரவேற்பை பெருகிறன்றன, காரணம் மற்ற நிறுவனங்களை விட சிறந்த டேட்டா நன்மையை வழங்கிவருகிறது அதுவும்
சற்று குறைந்த விலையில்.

இந்நிறுவனம் சார்பில் தற்சமயம் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது, அது என்னவென்று விரிவாகப் பார்ப்போம். அதன்படி ஜியோ தொலைதொடர்பு சேவை நிறுவனத்தின் முக்கிய அம்சமான ஜியோ பைபர், செப்டம்பர் முதல் தனது புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக இப்போது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக புதிய ஜியோ பைபர் திட்டங்கள் ஆனது ரூ.399-முதல் துவங்குகிறது, வரம்பற்ற இணையம், சமச்சீர் வேகம் (பதிவேற்ற வேகம் = பதிவிறக்க வேகம்) மற்றும் கூடுதல் கட்டணம் இல்லாமல் முதல் 12 கட்டண OTT பயன்பாடுகளுக்கான சந்தா உள்ளிட்ட நன்மைகளும்உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது செப்டம்பர் முதல் அறிமுகமாகும் ரூ.399, ரூ.699, ரூ.999, ரூ.1499 உள்ளிட்ட ஜியோ பைபர் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி புதிதாக இணைபவர்கள் 30 நாட்களுக்கு எந்த கட்டணமும் இன்றி, நிபந்தனைகளும் இன்றி சேவையை இலவசமாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த புதிய டாரிப்பின் படி ரூ.999திட்டத்தில் இணைபவர்கள் 150 Mbps அதிவேக இணைய சேவை உடன், 11 OTT தளங்களில் சப்ஸ்கிரிப்ஷனும் பெற முடியும். பின்பு ரூ.1499 பிளானில் இணைபவர்கள் 300 Mbps அதிவேக இணைய சேவை உடன், 12 OTT தளங்களில் சப்ஸ்கிரிப்ஷனும் பெற முடியும்.

மேலும் ஏற்கனவே இணைப்பு உள்ளவர்களுக்கும் சிறப்பு ஆஃபர்கள் வழங்கப்பட உள்ளது, பின்பு வர்கள் புதிய டாரிப் பிளானுக்கு மாறிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், தொலைபேசி, சாட்டிலைட் சேனல்கள், இணையம் ஆகிய மூன்றும் ஜியோ பைபர்சேவையில் ஒன்றாக கிடைக்கின்றன. இந்த சேவை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில, தற்போது நாடு முழுவதும்1600நகரங்களில் இயங்கி வருகிறது. பின்பு நாடு முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications