சத்தமில்லாமல் சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம்.!
ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை வழங்கிய வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்திலேயே அனைத்து அழைப்புகளும் இலவசம் என அறிவித்தது ஜியோ நிறுவனம்.

ஜியோ நிறுவனம்
இந்நிலையில் ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு இந்தியாவில் நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான
கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்கும் வசதியை வழங்கியுள்ளது.

அதாவது இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி பிப்ரவரி 5-ம் தேதி துவங்கி மார்ச் 28 வரை இந்திய அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.

குறிப்பாக இந்த இரு அணிகளுக்கு இடையில் ஒரே டெஸ்ட் போட்டி மட்டுமே நிறைவுற்று இருக்கிறது. இந்த தொடரின் மற்ற போட்டிகளை ஜியோ பயனர்கள் இனி இலவசமாக பார்க்க முடியும்.

அதாவது ஜியோ பயனர்கள் தங்களின் ஜியோடிவி செயலி மூலம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடும் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியும். இந்த அசத்தலான சேவைக்கு பயனர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அதேபோல் இந்த செயலியை கொண்டு நேரலை போட்டிகள் மட்டுமின்றி, ஹைலைட்டுகளையும் பார்க்க முடியும். மேலும் ஜியோடிவி செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிளே ஸ்டோர்களுக்கு சென்று செயலியை டவுன்லோட் செய்து நீங்கள் போட்டிகளை பார்க்கலாம். மேலும் இந்த ஆண்டு பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது ஜியோ நிறுவனம். அதன்படி இன்று சில மாதங்களில் 5ஜி சேவை கொண்டுவர திட்டமிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.


Click it and Unblock the Notifications