இறுதிக்கட்ட யுத்தம் : சரிக்கு சமமான சலுகைகள், எது சிறந்தது.?
ஜியோவின் இலவச சலுகைக்கு பின்னர் இலவசங்கள் இல்லாத ஒரு நேர்மையான கட்டண யுத்தம் நடக்கும்.!
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்தினால் உண்டான தொலைத்தொடர்புத்துறை கட்டண யுத்தமானது மற்றும் அதன் மிக மலிவான ப்ரைம் கட்டண சேவைகளை அறிவித்த பின்னர் குறையும் என்று எதிர்பார்க்க, அது மேலும் அதிகமான வண்ணம் தான் உள்ளது. குறிப்பாக ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களின் சந்தகைகளையும் சேர்த்து இந்திய தொலைதொடர்பில் உள்ள அனைத்து நிறுவனங்களின் சந்தைகளை ஜியோ தகர்த்தெறிந்தது.
மார்ச் 31-ஆம் தேதியோடு முடியும் (ஆனால் மேலும் ஒரு மாதம் இலவச சலுகைகள் தொடரும் என்று நம்பப்படுகிறது) ஜியோவின் இலவச சலுகைக்கு பின்னர் இலவசங்கள் இல்லாத ஒரு நேர்மையான கட்டண யுத்தம் நடக்கும் - அதில் எது சிறந்ததாக திகழும்.? ஏர்டெல் நிறுவனமா.? அல்லது ஜியோ நிறுவனமா.?

ரூ.99/-
ரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் சலுகைகளில் கிடைத்த அதே நன்மைகளை தொடர, முதலில் ப்ரைம் மெம்பராக மாற வேண்டும் (ரூ.99/-) பின்னர் ரூ.149/-ல் இருந்து ஆரம்பமாகும் ஜியோ கட்டண சலுகைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

ரூ.149/-
ரூ.149/- ரீசார்ஜ் செய்ய ப்ரைம் மெம்பர்களுக்கு 100 எஸ்எம்எஸ் இணைந்து 28 நாட்கள் செல்லுபடியாகும் 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டா கிடைக்கும்.

ரூ.303/-
ஒருவேளை ரூ.149/- திட்டம் உங்களுக்கு ஏற்ற ஒன்றாக இல்லையெனில் ரூ.303/- ரீசார்ஜ் செய்ய 28 நாட்கள் செல்லுபடியாகும் இலவச வரம்பற்ற அழைப்புகள், எஸ்எம்எஸ், மற்றும் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா பெறலாம்.

நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி
மறுபுறம், ஜியோ பயனர்கள் நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலாக இலவச 4ஜி இணைய அணுகலை தொடர்ந்து அனுபவிக்கலாம்.

நாள் ஒன்றிற்கு 2ஜிபி
ஒருவேளை நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா உங்களுக்கு பற்றாது எனில் இலவச வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் இணைந்த 56ஜிபி அளவிலான 4ஜி தரவு வழங்கும் ரூ.499/- ரீசார்ஜை நிகழ்த்திக் கொள்ளலாம். 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டம் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான தினசரி வரம்பு கிடைக்கும்.

28 நாட்கள் செல்லுபடி
மறுபக்கம் பார்தி ஏர்டெல் ஆனது ஜியோவின் ரூ.303 திட்டத்திற்கு சமமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது அதாவது ரூ.345/-க்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் 28ஜிபி அளவிலான 3ஜி அல்லது 4ஜி டேட்டாவை வழங்குகிறது.

500எம்பி+500எம்பி
இந்த ரூ.345/- திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 வரை 500எம்பி தரவும் மற்றும் நள்ளிரவு 12 முதல் காலை 6 மணி வரை 500 அளவிலான தரவும் பெறுவார்கள்.

உள்ளூர் மற்றும் வெளியூர்
மேலும், வாடிக்கையாளர்கள் 12 மாத காலம் இந்தச் சேவையை பெற மார்ச் 31-ஆம் தேதிக்கு முன் ரூ.345/- திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டம் தரவுடன் கூடுதலாக, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகிறது.

மேலும் படிக்க
ப்ரைம் மெம்பருக்கு சக்கரை பொங்கல், மற்றவர்களுக்கு வெறும் பொங்கல்.!


Click it and Unblock the Notifications