ஜியோ போன் 60 லட்சம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு.!
60 லட்சம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த ஜியோ போன்களை வரும் செப்டம்பர் 21ஆம் தேதி டெலிவரி செய்யப்படும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் அதிகம் பேசப்படுவது இந்த ஜியோ போன் தான். வரும் செப்டம்பர் ஆம் தேதி முதல் ஜியோ போன் டெலிவரி செய்யப்படும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது, இந்நிலையில் நாடு முழுவதும் 60 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோ போனை முன்பதிவு செய்துள்ளனர்.
ஜியோ போனை வாங்க ரூ.1500 வரை முன்பணம் செலுத்தவேண்டும் என அந்நிறுவனம் அறிவித்து இருந்தது. மேலும் இந்தியாவில் 2ஜி வாடிக்கையாளர்களை குறிவைக்கும் நோக்கில் ஜியோ போனை விற்பனைக்கு கொண்டுவருகிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

செப்டம்பர் 21:
60 லட்சம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த ஜியோ போன்களை வரும் செப்டம்பர் 21ஆம் தேதி டெலிவரி செய்யப்படும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

செக்யூரிட்டி டெபாஸிட் :
ரூ.1500/- என்ற செக்யூரிட்டி டெபாஸிட் செலுத்தி ஜியோபோன் ஒன்றை சொந்தமாகும் வாடிக்கையாளர்களுக்கு 36 மாதங்களுக்கு பின்னர் அந்த தொகை வாடிக்கையாளர்களிடம் திருப்பி கொடுக்கப்படுமென்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

பீச்சர் போன் ஜியோ சிம்:
இந்த ஜியோ பீச்சர் போன் பொதுவாக ஜியோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மற்ற தொலைத் தொடர்புகளின் சிம் இவற்றில் பயன்படுத்த முடியாத வண்ணம் உள்ளது. எனவே ஏர்டெல், வோடபோன், ஐடியா, போன்ற தொலைத் தொடர்புகளின் சிம்களை இவற்றில் பயன்படுத்த முடியாது.

ஜியோசினிமா:
ஜியோபோன் ஆனது, 400-க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை வழங்கும் ஜியோ டி.வி உட்பட ஜியோம்யூஸிக், ஜியோசினிமா ஆகிய முன்-ஏற்றப்பட்ட பயன்பாடுகளின் தொகுப்பும் கொண்டுள்ளது.மேலும் நுகர்வோர் தொடர்ந்து சிறந்த சேவைகளை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக இது மிகவும் பிரபலமான உடனடி செய்தியையும், சமூக வலைப்பின்னல் பயன்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது.

மீடியா கேபிள்:
ஜியோபோனை ஜியோ மீடியா கேபிள் உதவியுடன் டிவியுடன் இணைக்கலாம் என்ற இதன் அம்சம், பீச்சர் சாதனத்தை ஒரு ஸ்மார்ட்போனாக மாற்றும் அம்சம் என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications