ஒரே ஒரு மிஸ்டேக்.. மொத்தமா போச்சு.. 1 கோடி பேர் Jio-வை விட்டு விலகல்.. BSNL-க்கு கூட்டம் அள்ளுது.. என்ன தப்பு?
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களை உள்ளடக்கிய தனியார் போட்டியாளர்கள் செய்த சமீபத்திய செயல்பாட்டு தவறுகளின் காரணமாக அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பக்கம் கூட்டம் குவிந்துள்ளது. ஜியோ போன்ற ஜாம்பவான் நிறுவனம் செய்த ஒரு சிறிய பிழை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கு லாபத்தை வழங்கியுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) வெளியிட்ட சமீபத்திய அறிக்கைகளின் படி, பிஎஸ்என்எல் (BSNL) புதிய வாடிக்கையாளர்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிப்பை அனுபவித்து வருவதாக TRAI தெரிவித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில், ஜூலை முதல் அக்டோபர் வரை, மொத்தம் 55 லட்சம் தனிநபர்கள், தாங்கள் பயன்படுத்தி வந்த தனியார் டெலிகாம் சேவையை புறக்கணித்துவிட்டு பிஎஸ்என்எல் சேவைக்கு மாற்றத் தேர்வு செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரே ஒரு மிஸ்டேக்.. மொத்தமா போச்சு.. 1 கோடி பேர் Jio-வை விட்டு விலகல்:
இதில் குறிப்பாக, முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அதிக அளவில் இழப்பை சந்தித்துள்ளது. TRAI தகவலின் படி, 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க்கில் (Jio network) வெளியேறியுள்ளனர். மக்களின் இந்த மொத்த இடம்பெயர்வுக்கு பின்னால் இருந்த ஒரு முக்கிய காரணி, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜூலையில் தங்கள் ரீசார்ஜ் விகிதங்களை 25 சதவீதம் வரை உயர்த்தியதாகும்.
இந்த நடவடிக்கை தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு பெரியளவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இது வாழ்க்கைச் செலவு அதிகரிப்போடு போராடி வரும் வாடிக்கையாளர்களை மிகவும் மலிவான மாற்றுகளை இது தேடத் தூண்டியது. சிறந்த நெட்வொர்க் கவரேஜை பிஎஸ்என்எல் கொண்டிருக்கவில்லை என்றாலும், பல லட்சம் வாடிக்கையாளர்களுக்கு BSNL முதன்மையான தேர்வாக மாறியது. இந்த மாற்றம் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி (MNP) சேவையால் மிகவும் எளிதாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
65 லட்சம் பேர் BSNL நெட்வொர்க்கிற்கு எளிதாக மாற உதவியது MNP தான்:
தனியார் நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்கு மாற துடிக்கும் வாடிக்கையாளர்கள், தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் மொபைல் எண்களை அப்படியே வேறொரு நெட்வொர்க்கிற்கு மாற Mobile Number Portability உதவியது. இதன் விளைவாக, கடந்த நான்கு மாதங்களில் சுமார் 55 லட்சம் பயனாளர்கள் தங்கள் எண்களை பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாற்றியுள்ளனர். இந்த காலகட்டத்தில் நிறுவனத்திற்கு மொத்தமாக சுமார் 65 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.
வாடிக்கையாளர் எண்ணிக்கையில் இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தை முன்னோக்கி நகர பெரிதும் உதவியுள்ளது. BSNL நிறுவனம் இந்த மாற்றத்தை அப்படியே பிடித்துக்கொண்டு முன்னேற ஓய்வில்லாமல் முயற்சி செய்து வருகிறது. இதன் விளைவாக BSNL தனது சேவைகளை மேம்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. BSNL அதன் நெட்வொர்க் கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
BSNL 4G மற்றும் BSNL 5G குறித்து தகவல் வெளியிட்ட தொடர்புத்துறை மத்திய அமைச்சர்:
BSNL நிறுவனம் ஏற்கனவே சுமார் 51,000 புதிய மொபைல் டவர்களை நிறுவியுள்ளது. அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்க இலக்கு வைத்துள்ளது. இந்த விரிவாக்கம் பிஎஸ்என்எல் அடுத்த ஜூன் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் தனது பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவைகளை அறிமுகப்படுத்தும் என்று நம்பிக்கை கூறியுள்ளது. இப்போதே பல இடங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை கிடைக்க செய்துள்ளது.
தொடர்புத்துறை மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா 4ஜி வெளியீட்டிற்கான காலவரையை உறுதிப்படுத்தியதோடு, பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G) சேவைகளை நிறுவனம் தற்போது சோதித்து வருவதாகவும், அதுவும் விரைவில் களமிறங்கும் என்று BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளார். பிஎஸ்என்எல் எதிர்காலத்தில் விலையை அதிகரிக்க எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளது.
மலிவு விலையில் திட்டங்களை வழங்கி, இதே போல் அதிக வாடிக்கையாளர்களை கவர வேலை செய்கிறதென்று பிஎஸ்என்எல் அதிகாரி தெரிவித்திருக்கிறார். விலை ஏற்றம் என்ற ஒரே ஒரு தவறின்னால், ஒட்டுமொத்த தனியார் டெலிகாம் நிறுவனங்களின் வியாபாரம் அடியோடு படுத்துவிட்டது. இங்கு மக்கள் முடிவு பிஎஸ்என்எல் லாபத்தை மாற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications








