10 கோடி அழைப்பு தோல்விகள் : ஏர்டெல் மீது ஜியோ பாய்ச்சல்..!
ஏர்டெல் நெட்வெர்க் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 10 கோடி அழைப்பு தோல்விகளை சந்திப்பதாக முகேஷ் அம்பானி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இணைப்பு புள்ளிகள் சார்ந்த நினைவூட்டல்கள் மீண்டும் மீண்டும் நிகழ்த்திய போதிலும் கடந்த 15 நாட்களில் செயல்பாட்டு திட்டங்களில் எந்தவிதமான பரஸ்பரமும் ஏற்படவில்லை என்பதால் இந்த அறிவிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆப்ரேட்டர் ஒன்றுக்கு 4,000 முதல் 5,000 இணைப்பு புள்ளிகள் தேவை என்ற நிலையில் ஏர்டெல் 2,000 இணைப்பு புள்ளிகளை விட குறைவாகவும், வோடபோன் நிறுவனம் 1,500 மற்றும் ஐடியா 1,600 இணைப்பு புள்ளிகளும் கொண்டுள்ளது என்று ரிலையன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"பல நினைவூட்டல்கள் மற்றும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா ஆகிய 3 நிறுவனங்களிடம் இருந்தும் எந்த புதிய பரஸ்பரத் தொடர்பு திறனும் ஏற்ப்படவில்லை" என்றும், அழைப்பு தோல்வியின் விகிதம், நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது, வேகமான பரஸ்பரத் தொடர்பு திறன் பெருக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அறிக்கை கூறுகிறது.

"தற்போதைய விகிதத்தில் பொறுப்புள்ள ஆப்பரேட்டர்கள் இந்த சிக்கலைத் தீர்க்க எந்த உண்மையான நோக்கத்தையம் நிரூபிக்கவில்லை என்று தெளிவாகிறதுமற்றும் இந்த மூன்று ஆப்பரேட்டர்களுக்கு இடையே நாள் ஒன்றுக்கு 10 கோடி அழைப்பு தோல்விகள் ஏற்படுகிறது" என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க :
ஜியோவை கூட்டு சேர்ந்து 'கும்மியடிக்கும்' பிற நெட்வெர்க்குகள்..!


Click it and Unblock the Notifications